அன்லாக் 4.0.. செப்டம்பர் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் செயல்படாது!
டெல்லி: செப்டம்பர் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் செயல்படாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க லாக்டவுன் போடப்பட்டுள்ளது. நாடு முழுக்க கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 5 முறை லாக்டவுன் போடப்பட்ட பின்பும் கூட கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த லாக்டவுன் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அன்லாக் 1, 2, மற்றும் 3 என்று மூன்று கட்டமாக அமலுக்கு வரும் என்று அரசு தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது கூடுதலாக அன்லாக் 4.0 செயல்முறை அமலுக்கு வந்துள்ளது.
அன்லாக் 4.0 செயல்முறையில் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் செயல்படாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆன்லைன் முறையில் மட்டுமே மாணவர்கள் கல்வி பயிலலாம். கல்வி நிறுவனங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30 வரை இந்த அன்லாக் செயல்முறைகள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்லாக் 2.0ல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்லாக் 4.0லும் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications