கோபத்தில் பேசிய வார்த்தை.. கணவனை கதற கதற.. மர்ம உறுப்பையே இல்லாமல் செய்த 2வது மனைவி
டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அமேதி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அன்சார் அகமது என்பவருக்கு இரண்டு திருமணம் ஆகி உள்ளது. ஆனால் குழந்தைகள் இல்லை.. இரண்டு திருமணம் ஆகியும் குழந்தை இல்லாததால் அடிக்கடி மனைவிகளுடன் சண்டை போட்டு வந்தாராம். இதில் அவரது இரண்டாவது மனைவி ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவரது மர்ம உறுப்பிலேயே மனைவி செய்த காரியம் ஆடிப்போக வைத்துள்ளது.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக பெரியவர்கள் கூறுவார்கள். இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் எழுதி வைத்திருப்பதாகவும் கூறுவார்கள். ஆனால் சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் அதிருப்தி ஏற்பட்டு இரண்டாம் திருமணம் செய்வது நடக்கும். சிலர் முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்வார்கள்.

ஆனால் சிலர் தங்கள் மத வழக்கப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்வதும் இருக்கிறது. ஆனால் எத்தனை திருமணம் செய்தாலும் திருமண உறவு இனிமையாக இல்லாமல் போனால் வாழ்க்கையே நரகமாகும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் ஆகும்.
உத்தரபிரதேச மாநிலம் அமேதியை அடுத்து உள்ளது ஜகதீஷ்பூர். இந்த ஊருக்கு அருகே உள்ள குக்கிராமம் பசன்கஞ்ச் கச்னாவ். இந்த கிராமத்தில் 38 வயதாகும் அன்சார் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருடைய முதல் மனைவியின் பெயர் சபேஜூல். இவருடைய இரண்டாவது மனைவியின் பெயர் நஸ்னீன் பானு. இரண்டு திருமணமாகியும் குழந்தை இல்லை.. இதனால் அன்சார் அகமது, தனது மனைவிகளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம். குறிப்பாக தனது இரண்டாவது மனைவி நஸ்னீன் பானுவுடன் அடிக்கடி சண்டைபோட்டு வந்தார் அன்சார் அகமது.
நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து, கடும் கோபம் அடைந்த நஸ்னீன் பானு, கணவரின் மர்ம உறுப்பை கதற கதற கத்தியால் துண்டித்திருக்கிறார். இது எப்படி நடந்தது என்பது குறித்து தெரியவரவில்லை..
இதில் படுகாயம் அடைந்த அன்சார் அகமதுவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜகதீஷ்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ரேபரேலியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் நஸ்னீன் பானுவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications