Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்யாணம் முடிந்த 15 நாளில் கணவனுக்கு காரியமே செய்த பிரகதி.. தடுமாறிய வார்த்தைகளால் சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டம் சஹார் பகுதியை சேர்ந்த திலீப் யாதவ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரகதி யாதவ் என்ற பெண்ணுக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்த 15வது நாளிலேயே இளம் பெண் பிரகதி தனது சுயரூபத்தை காட்டியுள்ளார். கூலிப்படை வைத்து கணவனுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் காதலனுடன் தற்போது கைதாகி உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டம் சஹார் பகுதியை சேர்ந்த திலீப் யாதவ் என்பவருக்கு திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர். இதன்படி திலீப் யாதவுக்கு அதே பகுதியை சேர்ந்த பிரகதி யாதவ் (வயது 22) என்ற பெண்ணை கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர்.

delhi Uttar Pradesh marriage

இந்தநிலையில் கடந்த மார்ச் 19-ந் தேதி சஹார் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் திலீப் யாதவ் படுகாயங்களுடன் கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று, திலீப் குமார் யாதவை மீட்டு. பிதுனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.திலீப்குமார் யாதவை தாக்கியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சைபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், திலீப் குமாரை அவருடைய குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி திலீப் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக அவருடைய மனைவி பிரகதியிடம் போலீசார் விசாரித்த போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் திரும்பியது.

பின்னர் போலீசார், தங்கள் பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். இதில் பிரகதி உண்மையை ஒப்புக்கொண்டார். பிரகதி, அனுராக் என்கிற மனோஜை திருமணத்துக்கு முன்பே காதலித்து வந்துள்ளார். அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், பிரகதியை திலீப்குமார் யாதவுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இதனால் தனது கணவரை தீர்த்துக்கட்ட காதலனுடன் பிரகதி திட்டம் தீட்டினார். அதன்படி கூலிப்படையை சேர்ந்த ராம்ஜி சவுத்ரிக்கு ரூ.2 லட்சம் கொடுத்து திலீப்குமாரை தீர்த்துக்கட்டுமாறு தெரிவித்தாராம்.

இதன்படி அவரும் கடந்த 19-ந்தேதி திலீப்குமாரை, உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு வயல்வெளியில் போட்டு சென்று விட்டார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. இதை உறுதி செய்ய சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் பிரகதி, அவருடைய காதலர் அனுராக், கூலிப்படையை சேர்ந்த ராம்ஜி சவுத்ரி ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருமணம் ஆன 15 நாளில் கணவனை மனைவி கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+