அரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்துள்ளது என்பது, போராட்டத்தின் வடிவம் என்று, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரபல ஆங்கில ஊடகத்திற்கு சிறப்பு பேட்டியளித்துள்ள ரகுராம்ராஜன் மேலும் கூறியதாவது: உர்ஜித் பட்டேல் ராஜினாமா என்பது கவலைதரும் விஷயம். அரசு ஊழியர் ராஜினாமா செய்வது என்பது, போராட்டத்தின் ஒரு வடிவம்.

எதிர்கொள்ள முடியாத பிரச்சினைகள் வரும்போதுதான், இதுபோன்ற ராஜினாமாக்கள் நிகழும். ரிசர்வ் வங்கியுடன் அரசு மேலும் சிறப்பான உறவை பேண வேண்டியது அவசியம். உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்ய தூண்டியது என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு அரசு ஊழியர் அல்லது ரெகுலேட்டர் பதவியில் இருப்பவர், இப்படித்தான் தனது போராட்டத்தை வெளிப்படுத்த முடியும். அதைத்தான் உர்ஜித் பட்டேல் செய்துள்ளார் என்று கருதுகிறேன். எனவே அரசு இதை சரியாக கவனித்துக்கொள்வது அவசியம்.
ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு செயல்படும் தன்மையோடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்பு, இது அறிவுரை சொல்லும் குழுவாகத்தான் செயல்பட்டது. நிபுணத்துவம் பெற்றவர்கள் கொள்கை முடிவுகளை எடுத்தனர். இயக்குநர் குழு அறிவுரை மட்டும் கூறியது.
இயக்குநர் குழுவை மேலும் செயல்படும் அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்றுவது என்பது, நிபுணத்துவம் கொண்ட மேலாண்மை திறனை பாதிப்படையச் செய்கிறது. பொதுவானவரகளை இயக்குநர் குழுவில் அமர்த்தி அவர்கள் கொள்கை முடிவுகளில் தலையிடுகிறார்கள்.
இதுதான் நிலைமை என்றால், பொருளாதார நிபுணத்துவம் பெற்றவர்களையும் சரிசமமான அளவில் ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications