அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை
டெல்லி: 2 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
மைக் பாம்பியோவின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் ரஷ்யாவுடனான இந்தியாவின் ஏவுகணை ஒப்பந்தம், உலகளாவிய தீவிரவாதம் மற்றும் எச் -1 பி விசாக்கள் போன்ற பல சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்தும் இந்த பயணத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

முன்னதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான மைக் பாம்பியோ சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த நாடுகளில் பயணத்தை முடித்து கொண்டு தற்போது இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது எச் -1 பி விசா வழங்குவது மற்றும் ரஷ்யாவுடனான இந்திய உறவு என பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார் மைக் பாம்பியோ. இந்த சந்திப்பு நிறைவடைந்த பிறகு அமெரிக்க அமைச்சருக்கு ஜெய்சங்கர் மதிய விருந்து அளித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலையும், அமெரிக்க அமைச்சர் பாம்பியோ சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனுமே இந்தியா நல்ல உறவுகளை பேணி வருகிறது. ஆனால் சில மாதங்களாக மேற்கண்ட இரு நாடுகளுக்குமிடையேகடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வணிக ரீதியான கருத்தாய்வுகளின் அடிப்படையில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறி வருகின்றன.
ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்ய கூடாது என்ற நியாயமான வாதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் விரும்புவதாக தெரிகிறது. மோடி - பாம்பியோ இடையிலான பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு வர்த்தகம் ஒரு முக்கியமான விவாதப் பொருளாக இருந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர், அடுத்த வாரம் நடைபெறும் ஜி 20 உச்சிமாநாட்டில் சந்தித்து பேச உள்ளனர். இந்நிலையில் மைக் பாம்பியேவின் இந்திய வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications