இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு விமானங்களை அனுமதிக்க அமெரிக்கா மறுப்பு
டெல்லி: இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு விமானங்களை அனுமதிக்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க வந்தே பாரத் என்ற சிறப்பு விமானங்களும் கப்பல்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த விமானங்கள் மூலம் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தியர்களை மீட்பதற்காக பயன்படுத்தப்படும் ஏர் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு விமானங்களை அனுமதிக்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு செல்ல அமெரிக்க விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு விமானங்களில் பொதுமக்களிடம் இருந்து கட்டணத்தை பெற்றுக் கொண்டு ஏர் இந்தியா விமானம் செயல்படுவதாகவும் அமெரிக்க விமான போக்குவரத்து கழகம் குற்றம்சாட்டியுள்ளது.
இதனால் இந்திய விமானங்களுக்கான அனுமதியை மறுத்துள்ளது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை பாகுபாட்டை ஊக்குவிக்கும் செயல் என மத்திய அரசு விமர்சனம் செய்துள்ளது. விமானங்கள் உண்மையில் மீட்பு நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டவை. ஆனால் ஏர் இந்திய விமானங்கள் ஒரு நாட்டின் விமான கட்டுப்பாடுகளை மீறும் வகையில் மீட்பு பணிகளில் ஈடுபடுகிறது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இந்த உத்தரவு 30 நாட்களுக்கு செல்லும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications