வாக்காளர் பங்களிப்பை அதிகரிக்க USAID பயன்படுத்தப்படவில்லை! மத்திய அரசு விளக்கம்!
டெல்லி: தேர்தல்களில் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிக்க வழங்கப்பட்ட USAID நிதி, ஆட்சி மாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், இந்த நிதி வாக்காளர் பங்களிப்பை அதிகரிக்க USAID பயன்படுத்தப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதி, முறைகேடாக பயன்படுத்தப்பட்டது என்றும், குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனை காங்கிரஸ் மறுத்திருக்கிறது. மறுபுறும் தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் நிதியை பாஜக எப்படி கையாள்கிறது? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில், இந்த நிதியை கொண்டு மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் விவரங்களை நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தற்போது அமெரிக்கா USAID நிதியாக ஏறத்தாழ $750 மில்லியன் வழங்கியிருப்பதாகவும், இதில் 7 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஆனால் வாக்காளர், தேர்தல் குறித்த திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2023-24 ஆம் ஆண்டில் மொத்தம் 825 கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்க கடன் வழங்கியுள்ளது. ஆனால் இந்த நிதியை கொண்டு தேர்தலில் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிக்க எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
அதற்கு பதில் விவசாயம் உணவு பாதுகாப்பு நீர் மேலாண்மை சுகாதாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட திட்டங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர காடுகள் மற்றும் காலநிலை தகவல் திட்டத்திற்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது என மத்திய அரசு கூறியுள்ளது.
அமெரிக்கா இவ்வாறு உதவி செய்வது கடந்த 1951 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது வளர்ந்து வரும் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவி செய்து வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளில் சுகாதாரத்திற்கும் மருத்துவ மேம்பாட்டிற்கும் இந்த நிதி அதிக அளவில் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மறுபுறம் இந்த நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய அரசுக்கும் காங்கிரசுக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது. காங்கிரஸ் களத்தில் ஒதுக்கப்பட்ட நீதி பாஜகவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அதேபோல தற்போது ஒதுக்கப்பட்டு இருக்கும் நிதி குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.
அப்பொழுது பல வெளிநாட்டு நிறுவனங்களை சந்தித்து இந்தியாவுக்கு எதிரான ஊழல் பிரச்சனைகளை எழுப்புமாறு அவர் வலியுறுத்தியதாக பாஜக குற்றம் சாட்டியிருக்கிறது. இதற்காகவே அமெரிக்கா உருக்கிய நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறி இருக்கிறது. பாஜகவின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கடுமையாக மறுப்பு தெரிவித்து வருகிறது.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications