பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய உத்தரகாண்ட்.. இன்று புனிதமான நாள்: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்
டெல்லி: தேவபூமி என போற்றப்படுகிற உத்தரகாண்ட் ,மாநிலம் இன்று முதல் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும் என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்ட இன்றைய நாள் புனிதமானது என்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.
ராஜ்யசபா உள்ளகப் பயிற்சித் திட்டத்தின் ஐந்தாவது தொகுதி பங்கேற்பாளர்களுக்கான தொடக்க நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தலைமை தாங்கினார். துணை ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற உள்ளகப் பயிற்சித் திட்டத்திற்கான இணைய தளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

ராஜ்யசபா உள்ளகப் பயிற்சி திட்டத்தில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், இன்று ஒரு நல்ல அறிகுறி ஏற்பட்டுள்ளதாகவும், அது மங்களகரமான அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர்கள் அரசியலமைப்பில், குறிப்பாக பகுதி 4-ல் அரசு கொள்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக வழிகாட்டியுள்ளனர். இந்த நெறிமுறைக் கோட்பாடுகளை அடைய அரசு கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 44-ன்படி நாடு முழுவதும் குடிமக்களைப் பாதுகாக்க ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வகை செய்கிறது என்று தெரிவித்தார். நாம் அனைவரும் இன்று மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறோம். தேவபூமி உத்தரகண்ட் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளதற்காக அந்த அரசின் தொலைநோக்குப் பார்வையைத் தாம் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை சுட்டிக்காட்டிய துணை ஜனாதிபதி தன்கர், இவ்வாறு குடியேறிய லட்சக்கணக்கானவர்கள் தேசத்திற்கு சவாலாக உள்ளனர் என்றார். அவர்கள் நமது மக்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர் என்பதால், அரசில் உள்ள ஒவ்வொருவரும் இது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications