வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இந்த ரூட்டில் தான் ஓடப் போகுதாம்.. எப்போதில் இருந்து தெரியுமா?
டெல்லி: வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ள நிலையில் தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் எந்த ரூட்டில் முதலில் சேவைக்கு வருகிறது என்றும், என்றைக்கு முதல் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பயண நேரம் குறைவு, முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள் என பயணிகளை கவரும் விதமாக இந்த ரயில் சேவை இருப்பதால் வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் விரும்பி பயணம் செய்கிறார்கள். தற்போது வந்தே பாரத் ரயில்ககள் இருக்கை வசதி கொண்டவையாக மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

வந்தே பாரத் ரயில்: பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களையும் இயக்க ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஐசிஎப்பில் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருப்பது போல அதி நவீன வசதிகளுடன் ஸ்லீப்பர் ரயில்கள் இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
ஸ்லீப்பர் ரயில் சேவை: படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை தொலை தூரங்களுக்கு இயக்கப்பட உள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டவை என்பதால் பயணிகளின் பயண நேரம் மிச்சமாகும். இதனிடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் எந்த வழித்தடத்தில் இயங்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்டு 15 முதல் சேவை: வரும் ஆகஸ்டு 15 ஆம் தேதி இந்த ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். டெல்லி - மும்பை அல்லது டெல்லி - கொல்கத்தா ரூட்டில் முதல் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. டெல்லி டூ கொல்கத்தா இடையேயான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் என்பது பயணிகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கும்.
ஹீட்டர் வசதி: அதேபொல நாட்டின் நிதி தலைநகரத்திற்கும் தலைநகரத்திற்கும் இடையே இயக்கப்படலாம் என சொல்லப்படுவதால் பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் முழுக்க ஏசி வசதி கொண்டதாகும். முதல் வகுப்பு பெட்டியில் ஹீட்டர் வசதி உள்ளிட்ட பல வசதிகள் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. ராஜ்தானி, சதாப்தி போன்ற சொகுசு ரயில்களுக்கு மாற்றாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications