ராகுல் காந்திக்கு உதவும் தேர்தல் ஆணைய ஊழியர்கள்? வாக்கு திருட்டு விஷயத்தில் அவரே சொன்ன மேட்டர்
டெல்லி: ராகுல் காந்தி வாக்கு திருட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். டெல்லியில் இன்று நடந்த பிரஸ்மீட்டில் ராகுல் காந்தி பேசும்போது, ‛‛இப்போது எங்களுக்கு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளே இருந்தே உதவி கிடைக்க தொடங்கி விட்டது'' என்று கூறி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 7 ம் தேதி டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது லோக்சபா தேர்தல்,

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்களில் பாஜக வாக்குகளை திருடியதாகவும், அதற்க தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்ததாகவும்
கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது பெரும் விவாதத்தை கிளப்பியது.
அதன்பிறகு பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து ராகுல் காந்தி பேரணி மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி விரைவில் வாக்கு திருட்டு குறித்த புதிய ஹைட்ரஜன் குண்டை போடும். அதன்பிறகு பிரதமர் மோடியால் நாட்டு மக்களிடம் முகத்தை கூட காண்பிக்க முடியாது என்று கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக தான் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் ராகுல் காந்தி இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது வாக்கு திருட்டு தொடர்பான தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் சில விஷயங்களை வீடியோ கான்பரன்சிங் மூலமாக பத்திரிகையாளர்களுக்கு காண்பித்தபடி ராகுல் காந்தி கூறியதாவது:
தேர்தலில் நீக்கப்பட்டவர்களின் பெயர் விவரங்களை வழங்காமல் தேர்தல் ஆணையம் இந்தியாவின் ஜனநாயகத்தை கொல்கிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்களில் வாக்காளர்கள் அதிகளவில் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஜனநாயக படுகொலையை தடுக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. இதனால் வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்படும் பெயர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் ஒரு வாரத்துக்குள் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்திய மக்களின் உரிமை மற்றும் ஜனநாயகத்தை காக்க வேண்டும். அவருக்கு 100 சதவீதம் புல்லட்ப்ரூப் பாதுகாப்பு வழங்குவேன். இதனால் மகாராஷ்டிரா ரஜூராவில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் கர்நாடகாவின் ஆலந்த் தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை வெளியிட வேண்டும்.
எங்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து இப்போது தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே எங்களுக்கு உதவி கிடைக்க தொடங்கிவிட்டது. தேர்தல் ஆணையத்தில் இருந்தே இப்போது எங்களுக்கு தகவல்கள் கிடைக்கின்றன. இது நிற்கப்போவது இல்லை'' என்று கூறியுள்ளார். அதாவது தனது குற்றச்சாட்டுக்கு தேவையான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்தில் உள்ளவர்களே தருவது போல் அவரது பேச்சு உள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்











Click it and Unblock the Notifications