UNSCல் சீர்திருத்தம் வேண்டும்.. சீன அதிபரை வைத்துக்கொண்டே.. பிரிக்ஸ் மாநாட்டில் விளாசிய பிரதமர் மோடி
டெல்லி: ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பேசி உள்ளார். சீன அதிபர் இடம்பெற்று இருந்த இந்த மீட்டிங்கில், பிரதமர் மோடி அதிரடியாக சில விஷயங்களை குறிப்பிட்டார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று இணையவழி மாநாடு நடத்தப்பட்டது.
இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜிங்பிங் உள்ளிட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி இந்த மாநாட்டில் தற்சார்பு பொருளாதாரம் குறித்தும், ஐநா பாதுகாப்பு கவுன்சில் குறித்தும் பேசினார்.

என்ன சொன்னார்
பிரதமர் மோடி தனது உரையில், கொரோனாவிற்கு பின் பிரிக்ஸ் நாடுகள் உலக அளவில் முன்னிலை வகிக்கும்.பொருளாதார ரீதியாக பிரிக்ஸ் நாடுகள் முன்னிலை வகிக்கும். இந்தியாவில் ஆத்மனிர்பார் திட்டம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. எங்களின் தற்சார்பு கொள்கை பிரிக்ஸ் அமைப்பில் இருக்கும் நாடுகளுக்கு உந்துகோலாக இருக்கும்.

இலக்கு
இந்தியாதான் உலகம் முழுக்க அதிக மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது. உலக நாடுகளின் மருந்து தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக அளவு வேக்சின் உற்பத்தியே எங்கள் இலக்கு. இனி அதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்.

குரல்
இந்தியா எப்போதும் பல தரப்பு குரல்களுக்கு செவி மடுக்கும். இந்தியாவை பொறுத்தவரை மொத்த உலகமும் ஒரு நாடுதான். இந்தியா எப்போது ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும்.ஐநா சபையை இந்தியா எப்போதும் மதிக்கிறது, நம்புகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

கோரிக்கை என்ன
பிரிக்ஸ் கூட்டமைப்பு மூலம் ஐநா பாதுகாப்பு கவுன்ஸிலில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். ஐநாவின் அனைத்து அமைப்புகளிலும் மாற்றம் வேண்டும். கொரோனாவிற்கு பின் முக்கியமான மாற்றங்கள் அவசியம் ஆகிறது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மோடி கோரிக்கை
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர்வதை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் எதிர்த்து வரும் நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அதோடு நாங்கள்தான் அதிக மருந்துகளை ஏற்றுமதி செய்கிறோம், வேக்சின் உற்பத்தியையும் அதிகமாக செய்வோம், தற்சார்பு பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளோம் என்று சீன அதிபரை வைத்துக் கொண்டு பிரதமர் மோடி அதிரடியாக பேசி உள்ளார்.
-
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
நடுக்கடலில் திடீரென யூடேர்ன் போட்டு இந்தியாவுக்கு திரும்பிய ரஷ்ய எண்ணெய் கப்பல்.. சீனா கடும் ஷாக் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
ஈரான் - அமெரிக்கா போருக்கு நடுவே.. யுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு.. ஆலோசித்தது என்ன? -
ஈரானுக்கு ஆதரவாக உள்ளே வரும் சீனா.. மிக பெரிய ட்விஸ்ட் கொடுத்த ஜின்பிங்.. அடுத்து என்ன நடக்கும்? -
அப்போ வெனிசுலா.. இப்போது ஈரான்! ஜனநாயகத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் டிரம்ப்! ஆனால் பிளான் வேற! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications