மேற்கு வங்கத்தில் முடிவுக்கு வரும் மம்தா சாம்ராஜ்யம்! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பாஜக! P-MARQ எக்ஸிட் போல்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த கையோடு, பல்வேறு நிறுவனங்களின் எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே 'மேட்ரைஸ்' கணிப்புகள் பாஜகவுக்குச் சாதகமாக இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள 'பி-மார்க்' (P-MARQ) நிறுவனத்தின் கணிப்புகள் மம்தா பானர்ஜிக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன.
மேற்கு வங்கத்தின் அரசியல் சதுரங்கம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 294 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து, பெட்டிகள் சீல் வைக்கப்பட்டுவிட்டன. மே 4ம் தேதி தான் வாக்கு எண்ணிக்கை என்றாலும், அதற்கு முன்னதாக வெளியாகியுள்ள எக்சிட் போல் முடிவுகள் மேற்கு வங்க அதிகார மையத்தில் ஒரு பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தியுள்ளது எனச் சொல்லலாம்.

அங்கு கடந்த 15 ஆண்டுகளாக மம்தா ஆட்சி தொடரும் நிலையில், அது இந்த முறை முடிவுக்கு வரக்கூடும் என சில கருத்துக் கணிப்புகள் சொல்கிறது. குறிப்பாக P-MARQ சர்வே அங்கு பாஜக ஆட்சியை அமைக்கும் என தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கடும் போட்டியைக் கொடுத்தாலும் பெரும்பான்மைக்கு வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.
பெரும்பான்மைக்குத் தேவையான 148** என்ற மேஜிக் எண்ணை பாஜக அசால்ட்டாகத் தாண்டும் என்கிறது பி-மார்க்!
பாஜக (BJP): 150 - 175 இடங்கள்
திரிணாமுல் காங்கிரஸ் (TMC): 118 - 138 இடங்கள்
காங்கிரஸ் (Congress): 02 - 06 இடங்கள்
இந்தக் கணிப்புகள் உண்மையானால், 150 இடங்களுக்கு மேல் பிடித்து பாஜக முதன்முறையாக மேற்கு வங்கத்தில் அரியணையில் அமரும். அதே சமயம், 2021ல் 200க்கும் மேற்பட்ட இடங்களை வாரிச் சுருட்டிய மம்தா பானர்ஜிக்கு, இது மிகப்பெரிய சரிவாக அமையும். பி-மார்க் மற்றும் மேட்ரைஸ் என இரண்டு கணிப்புகளுமே பாஜக-வுக்கு ஆதரவாக வந்துள்ளன. ஒருவேளை மம்தா பானர்ஜி தோல்வியடைந்தால், அது திரிணாமுல் கட்சிக்கே மாபெரும் அதிர்ச்சியாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications