சித்ரா தற்கொலை செய்தது ஏன்?.. கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?.. வெளியானது ஹேமந்தின் 20 நிமிட ஆடியோ
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா இறப்பதற்கு முன்னால் நடந்தது என்ன? ஹேமந்தும் அவரது நண்பரும் பேசிய 20 நிமிட ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப்பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹேமந்த் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஹேமந்தின் நண்பர் ரோஹித் மனு தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றம்
காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சையது ரோஹித். இவர் ஹேமந்தின் 10 ஆண்டு கால நண்பராவார். சித்ராவுக்கு நெருங்கிய நண்பர் இவர். சென்னை திநகரில் வாடகை வீட்டில் சித்ரா ஹேமந்த், ரோஹித் அவரது மனைவி ஆகிய 4 பேரும் ஒன்றாக வசித்து வந்தனராம். சித்ராவின் மரணத்திற்கு பிறகு ஹேமந்துடன் பேசிய ஆடியோ ஒன்றையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

20 நிமிட ஆடியோ
அதில் சித்ராவின் மரணத்திற்கு முன்னர் இறுதி நிமிடத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ஹேமந்த் கூறியிருந்தது பதிவாகியுள்ளது. அது சுமார் 20 நிமிட வீடியோவாகும். அதில் ஹேமந்த் கூறுகையில் என்னிடம் சித்ரா ஆக்டிவ்வாகவே பேசவில்லை. ரொம்ப அமைதியாக இருந்தார். இவரை ஷோவிற்குள் தனியாக விட்டது மட்டும் தவறு என்பது எனக்கு புரிந்தது.

சித்ரா
உடனே நான் சித்ராவிடம் சத்தியம் செய்தது போல் ஷோவில் ஜோடியாக அவனுடன் டான்ஸ் ஆடவில்லைல்ல என கேட்டேன். அதற்கு சித்ரா ஆடினேன் என்றார். நான் ஆடாதேனு தானே சொன்னேன் , ஏன் ஆடினே என கேட்டேன். எனக்கு கண்கள் கலங்கிவிட்டது. சித்ரா ஒருமாதிரியாகவே இருந்தார். இப்படி போகிறார், அப்படி போகிறார்.

சிகரெட்
உடனே நான் ஹோட்டல் அறைக்கு வெளியே இருந்த புல்வெளியில் சிகரெட் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். அப்போது சித்து வெளியே வா என அழைத்தேன், இதே வரேன் என கூறிவிட்டு சென்ற சித்ரா உடனே கதவை தாழிட்டுக் கொண்டார். நான் கதவுக்கு 2 அடிக்கு பின்னால் இருக்கிறேன். நான் உடனே அய்யோ இவ திருப்பியும் அழ ஆரம்பிப்பாளே, இதை வேறு சமாளிக்கணுமேனு நெனச்சுக்கிட்டே சிகரெட்டை முழுவதும் பிடித்து தூக்கி போட்டேன்.

கண் முன்னாடி தூக்கில் தொங்கிய சித்ரா
அம்மு, தங்கம், பட்டு, சித்து நான் வெளியே நிற்கிறேன், கதவை திறடினு சொல்லி கதவை தட்டினேன். திறக்கவே இல்லை. பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கதவுகளை தட்டினேன், அப்போதும் அவர் திறக்கவே இல்லை. ஏதோ ஹும்ஹும் என சப்தம் மட்டுமே கேட்டது. உடனே ரூம் பாயிடம் போய் பாத்ரூமை லாக் செய்துவிட்டேன் சாவி கொடுங்கள் என கேட்டேன். உடனே ரூம் பாய் கதவை திறக்கிறார், கண் முன்னாடி தூக்கில் தொங்கறாடா பாவி.... இப்படியாக அந்த ஆடியோ பதிவு உள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications