சிஏஏ பற்றி வார்த்தை விட்ட அமெரிக்கா.. உடனே பொங்கி எழுந்த ஜெய்சங்கர்! பாயிண்ட் பாயிண்டாக பதிலடி
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அமெரிக்கா அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் தான் நமது நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே சர்வதேச அளவிலும் சில நாடுகள் இந்தச் சட்டம் குறித்து கருத்து கூறி உள்ளனர்,

குறிப்பாக அமெரிக்கா இது குறித்து கருத்து கூறியிருந்தது. இந்தச் சட்டத்தை இந்தியா அமல்படுத்துவது குறித்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாக எல்லாம் கூறியிருந்தது. இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பி இருந்தது.
பதிலடி: இதற்கிடையே அமெரிக்காவின் கருத்திற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். நமது நாட்டில் நடந்த பிரிவினையையும் இதில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்ன அவர் பல்வேறு நாடுகளிலும் குறிப்பிட்ட மக்களுக்கு வேகமாகக் குடியுரிமை வழங்கும் திட்டங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பிரபல ஆங்கில ஊடகம் சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய அவரிடம் அமெரிக்க மண்ணில் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்ல இந்திய அதிகாரி திட்டமிட்டதாக அமெரிக்கா கூறுவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "நான் இங்கே முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்த விவகாரம் குறித்துப் பேசும் பலரும் இதை விளக்குவதில்லை.
ஒரே போல இல்லை: அதாவது கனடாவில் தான் அவர்கள் வன்முறை தீவிரவாத கருத்துக்களுக்கும் அவர்கள் வெளிப்படையாகச் செயல்படவும் அனுமதி அளித்துள்ளனர். ஆனால், அமெரிக்காவில் அப்படி இருப்பதில்லை. எனவே, அந்த இரு நாடுகளையும் ஒரே போலப் பார்ப்பது சரியானது இல்லை" என்று அவர் தெரிவித்தார். இந்தியா கனடா இடையே உறவு கடந்த பல மாதங்களாகவே மோசமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சிஏஏ குறித்த அமெரிக்காவின் கருத்துக்குப் பதிலளித்த அவர், "நமது வரலாற்றைப் பற்றி அவர்களுக்குத் தெளிவான புரிதல் இருப்பதில்லை. உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்தியாவில் நடந்தது போன்ற பிரிவினை நடந்ததே இல்லை. அப்படி எதாவது நடந்து இருந்தால் சிஏஏ சட்டம் எந்தளவுக்கு முக்கியமானது என்பது அவர்களுக்குப் புரியும்.
சட்டம் என்ன: இதில் இருக்கும் வரலாற்று நிகழ்வுகளை எல்லாம் தூக்கித் தூர வைத்துவிட்டு சும்மா இதில் பிரச்சினை பிரச்சினை என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. வரலாற்றில் நடந்த அநீதிக்கு மருந்தைத் தர முயல்வதே இந்தச் சட்டமாகும். இது குறித்து யார் வேண்டுமானாலும் எந்த கருத்துகளை வேண்டுமானாலும் சொல்லலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், இப்படி தான் செய்ய வேண்டும் என்று இந்தியாவை யாராலும் ஒருபோதும் நிர்ப்பந்திக்க முடியாது.
உலகெங்கும் இதுபோல குறிப்பிட்ட மக்களுக்கு விரைவாகக் குடியுரிமை வழங்கப் பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்படிப் பல நாடுகள் இனம், நம்பிக்கை, சமூகப் பண்புகளின் அடிப்படையில் விரைவாகக் குடியுரிமை வழங்கும் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. 1947 பிரிவினை இந்தியத் துணைக்கண்டத்தை இரண்டு சுதந்திர நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானாக பிரிந்தது. அப்போது மிக மோசமான வன்முறைகள் நடந்த நிலையில், பலர் லட்சம் பேர் இடம் பெயர வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
என்ன காரணம்: அப்போது இந்த நாட்டின் பதவியில் இருந்தவர்கள் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு (இந்துக்கள்) வாக்குறுதி அளித்தது, அதாவது அங்கே எதாவது பிரச்சனை இருந்தால் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம் என்றார்கள். இருப்பினும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதுவே பிரச்சினைக்குக் காரணம்.
இந்தியா மட்டும் இல்லை. உலகின் பல நாடுகளில் இதுபோல நடந்துள்ளது. உலகப் போர் சமயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல ஐரோப்பிய நாடுகள் இதுபோல வேகமாக குடியுரிமையை வழங்கி இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications