தாமதமாக கருத்து சொன்ன மோடி.. அயோத்தி தீர்ப்பு வந்த போது என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் பிரதமர் மோடி பஞ்சாப் எல்லையில் கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பிசியாக இருந்தார்.
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பு காரணமாக நாடு முழுக்க பாதுகாப்பு போடப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் அறிவுரையின் பெயரில் நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் காலை 10.30 மணிக்கு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் இந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்ன தீர்ப்பு
அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

என்ன எதிர்ப்பார்ப்பு
இதனால் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பை பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பெரிய அளவில் கொண்டாடினார்கள். நாடு முழுக்க பாஜக கட்சியின் பெரிய அளவில் கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.

மோடி லேட்
இந்த நிலையில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கொஞ்சம் தாமதமாகத்தான் கருத்து கூறினார். ராம பக்தியோ அல்லது ரஹீம் பக்தியோ இது தேச பக்தியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது. இந்த தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக் கூடாது. நாட்டு மக்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலை நாட்ட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஏன் தாமதம்
சுமார் 1 மணி நேரம் கழித்துதான் மோடி இந்த டிவிட்டை செய்தார். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் பிரதமர் மோடி பஞ்சாப் எல்லையில் கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பிசியாக இருந்தார்.

என்ன பணிகள்
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் கர்தார்பூர் வழி தடத்தை திறக்கும் விழா இன்று நடந்தது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் இந்தியா பக்கம் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். கர்தார்பூர் பகுதியில் எல்லா வருடமும் தர்பார் சாஹிப் என்ற பெயரில் விழா நடத்தப்படும். இங்கு செல்வது சீக்கியர்களின் கடமைகளில் ஒன்று.

என்ன பாதை
இதற்காகத்தான் கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை பல வருட பேச்சுவார்த்தைக்கு பின் ஒரு வருட கட்டுமான பணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று பஞ்சாப்பில் நடந்த இதன் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் மோடி அந்த விழாவில்தான் இருந்தார். இதனால்தான் அவரால் அயோத்தி குறித்து உடனே கருத்து தெரிவிக்க முடியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications