பட்ஜெட் 2019: நடுத்தர வர்க்கத்தினர், சம்பளதாரர்களுக்கு மத்திய அரசு அளித்த சூப்பர் சலுகைகள் விவரம்
Recommended Video
டெல்லி: நடுத்தர வர்க்கத்தினருக்கு மோடி அரசின் 2.0 பட்ஜெட்டில் மகிழ்ச்சியான விஷயம் என்றால் 5லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி கட்டத்தேவையில்லை என்பது மற்றும் வீட்டுக்கடனுக்கு 1.5 லட்சம் ரூபாய் கூடுதல் தள்ளுபடி மற்றும் ஒன்றரை லட்சம் வரை வரிச்சலுகை உள்ளிட்டவைகளை குறிப்பிடலாம். .
மத்திய பட்ஜெட் 2019 இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில் முக்கியமானது என்றால் வருமான வரி உச்ச வரம்பு தளர்வு, இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி தாக்கல் செய்யப்பட்ட போது வருமான வரி உச்ச வரம்பு ரூ.5லட்சமாக அதிகரிக்கப்பட்டது. அதில் எந்த மாற்றமும இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி இல்லை
இதன்படி 5லட்சம் வரை வருமானம் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் வரி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி 5 லட்சத்திற்கு மேலான ஆண்டு வருவாய் உள்ளவர்கள் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

1.5 லட்சம் சலுகை
நடுத்தர வர்க்கத்தினர் இனி எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாங்க கடன் வாங்கி வாங்கினால், கடன் மீதான வட்டியில், 1.5 லட்சம் வரை வருமான வரியில் தள்ளுபடி பெறலாம்.

சேமிப்பு திட்டங்கள்
அதேபோல் பாரம் 80 சியின் படி நடுத்தர வர்க்கத்தினர் தங்களது சேமிப்பு திட்டங்கள் மூலம் ஒன்றரை லட்சம் வரை வருமான வரிச்சலுக்கையும் பெற முடியும்.
இதேபோல் போஸ்ட் ஆபிசில் பணம் போட்டிருந்தாலோ, வங்கியில் பணம் போட்டிருந்தாலோ அதற்கான டிடிஎஸ் பிடித்ததில் 10 ஆயிரம் வரை வரிச்சலுகை பெற முடியும் என்று இருந்தது. இப்போது 40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிச்சலுகை
இதேபோல் வீட்டுக்கடன் வட்டியில் சுமார் 2லட்ம் வரை வருமான வரிச்சலுகை இனி கிடைக்கும். ரூ.45 லட்சம் மதிப்பு வரை உள்ள வீடுகள் வாங்க வங்கியில் அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் கடன் வாங்கினால் அதில் 1.5 லட்சம் முதல் 3.5 லட்சம் வரை சலுகை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் 15 வருடங்கள் கடன் பிரீமியம் இருந்தால் சுமார் 7 லட்சம் வரை வீட்டு கடன் தள்ளுபடியில் பயன்கிடைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

2 கோடி மதிப்பு
இரண்டு வீடு வைத்துள்ள வீட்டின் உரிமையாளர்கள் 2வது வீடு காலியாக இருந்தாலும் வரி செலுத்த வேண்டியிருந்தது. இனி வரிசெலுத்த வேண்டியதில்லை. ஒருவர் ஒரு வீட்டை விற்று வரும் பணத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். அப்படி அவர் வரி செலுத்த விரும்பவில்லை என்றால், அந்த பணத்தில் வேறு ஒரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என தான் இருந்தது. ஆனால் இப்போது வீட்டை விற்று கிடைக்கும் பணத்தில் இரண்டு வீடுகள் வரை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் 2கோடிக்குள் அதன் மதிப்பு இருக்க வேண்டும்.

ஒரு லட்சம் வரை
ஒரு சுய உதவிக் குழுவில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் இருந்தால் கூட, முத்ரா திட்டத்தின் கீழ் அந்த சுய உதவிக் குழுக்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என அறிவிக்ககப்பட்டுள்ளது. இதன்படி பெண்கள் சுயஉதவிக்குழுவை ஆரம்பித்தால் முத்ரா திட்டத்தில் எளிதில் கடன் பெற முடியும்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications