பட்ஜெட் 2019: நடுத்தர வர்க்கத்தினர், சம்பளதாரர்களுக்கு மத்திய அரசு அளித்த சூப்பர் சலுகைகள் விவரம்
Recommended Video
டெல்லி: நடுத்தர வர்க்கத்தினருக்கு மோடி அரசின் 2.0 பட்ஜெட்டில் மகிழ்ச்சியான விஷயம் என்றால் 5லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி கட்டத்தேவையில்லை என்பது மற்றும் வீட்டுக்கடனுக்கு 1.5 லட்சம் ரூபாய் கூடுதல் தள்ளுபடி மற்றும் ஒன்றரை லட்சம் வரை வரிச்சலுகை உள்ளிட்டவைகளை குறிப்பிடலாம். .
மத்திய பட்ஜெட் 2019 இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில் முக்கியமானது என்றால் வருமான வரி உச்ச வரம்பு தளர்வு, இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி தாக்கல் செய்யப்பட்ட போது வருமான வரி உச்ச வரம்பு ரூ.5லட்சமாக அதிகரிக்கப்பட்டது. அதில் எந்த மாற்றமும இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி இல்லை
இதன்படி 5லட்சம் வரை வருமானம் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் வரி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி 5 லட்சத்திற்கு மேலான ஆண்டு வருவாய் உள்ளவர்கள் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

1.5 லட்சம் சலுகை
நடுத்தர வர்க்கத்தினர் இனி எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாங்க கடன் வாங்கி வாங்கினால், கடன் மீதான வட்டியில், 1.5 லட்சம் வரை வருமான வரியில் தள்ளுபடி பெறலாம்.

சேமிப்பு திட்டங்கள்
அதேபோல் பாரம் 80 சியின் படி நடுத்தர வர்க்கத்தினர் தங்களது சேமிப்பு திட்டங்கள் மூலம் ஒன்றரை லட்சம் வரை வருமான வரிச்சலுக்கையும் பெற முடியும்.
இதேபோல் போஸ்ட் ஆபிசில் பணம் போட்டிருந்தாலோ, வங்கியில் பணம் போட்டிருந்தாலோ அதற்கான டிடிஎஸ் பிடித்ததில் 10 ஆயிரம் வரை வரிச்சலுகை பெற முடியும் என்று இருந்தது. இப்போது 40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிச்சலுகை
இதேபோல் வீட்டுக்கடன் வட்டியில் சுமார் 2லட்ம் வரை வருமான வரிச்சலுகை இனி கிடைக்கும். ரூ.45 லட்சம் மதிப்பு வரை உள்ள வீடுகள் வாங்க வங்கியில் அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் கடன் வாங்கினால் அதில் 1.5 லட்சம் முதல் 3.5 லட்சம் வரை சலுகை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் 15 வருடங்கள் கடன் பிரீமியம் இருந்தால் சுமார் 7 லட்சம் வரை வீட்டு கடன் தள்ளுபடியில் பயன்கிடைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

2 கோடி மதிப்பு
இரண்டு வீடு வைத்துள்ள வீட்டின் உரிமையாளர்கள் 2வது வீடு காலியாக இருந்தாலும் வரி செலுத்த வேண்டியிருந்தது. இனி வரிசெலுத்த வேண்டியதில்லை. ஒருவர் ஒரு வீட்டை விற்று வரும் பணத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். அப்படி அவர் வரி செலுத்த விரும்பவில்லை என்றால், அந்த பணத்தில் வேறு ஒரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என தான் இருந்தது. ஆனால் இப்போது வீட்டை விற்று கிடைக்கும் பணத்தில் இரண்டு வீடுகள் வரை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் 2கோடிக்குள் அதன் மதிப்பு இருக்க வேண்டும்.

ஒரு லட்சம் வரை
ஒரு சுய உதவிக் குழுவில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் இருந்தால் கூட, முத்ரா திட்டத்தின் கீழ் அந்த சுய உதவிக் குழுக்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என அறிவிக்ககப்பட்டுள்ளது. இதன்படி பெண்கள் சுயஉதவிக்குழுவை ஆரம்பித்தால் முத்ரா திட்டத்தில் எளிதில் கடன் பெற முடியும்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications