"கிளீன் ஸ்வீப்.." லோக்சபா தேர்தலில் வெற்றி யாருக்கு தெரியுமா.. அடித்து சொல்லும் பிரசாந்த் கிஷோர்!
டெல்லி: நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது லோக்சபா தேர்தலில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் திரும்பியுள்ளார். லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் கடந்த வாரம் மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அங்கே கடந்த வாரம் வரை ஜேடியு- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தது. ஆனால், திடீரென கடந்த வாரம் நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சி இந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது.
ஞாயிற்றுக்கிழமை காலை ஆளுநரைச் சந்தித்து நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ஆனால், சில மணி நேரங்களிலேயே பாஜக ஆதரவுடன் அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி அன்றைய தினம் மாலையே அவர் பாஜக ஆதரவுடன் மீண்டும் 9ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.
பிரசாந்த் கிஷோர்: இது பீகார் அரசியலைத் தாண்டி தேசியளவில் பேசுபொருள் ஆனது. ஏனென்றால் இந்தியா கூட்டணியை உருவாக்கியவர் முக்கிய தலைவர்களில் ஒருவர் நிதிஷ்குமார். அவரே கூட்டணியில் இருந்து விலகியுள்ளது எதிர்க்கட்சிகளுக்குப் பின்னடைவைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே வரும் லோக்சபா தேர்தலில் வெல்ல யாருக்கு வாய்ப்பு உள்ளது.. எந்த கூட்டணிக்கு தேசியளவில் மக்கள் ஆதரவு இருக்கிறது என்பது குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கிளீன் ஸ்வீப்: இது குறித்து பிரபல இந்தி ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவர், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி "கிளீன் ஸ்வீப்" செய்யும் என்று தெரிவித்துள்ளார். அதேநேரம் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸை உள்ளடக்கிய கூட்டணியை முறித்த நிதிஷ்குமாரைக் கடுமையாகச் சாடிய அவர், இதுதான் நிதிஷின் கடைசி இன்னிங்ஸ் என்றும் விமர்சித்தார்.
நிதிஷ் குமாரை சந்தர்பவாதி என்று விமர்சித்த பிரசாந்த் கிஷோர், 2025 பீகார் சட்டசபைத் தேர்தலில் ஜேடியு கட்சியால் 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது என்றும் கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், "எந்தக் கூட்டணியில் போட்டியிட்டாலும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் நிதிஷ்குமாரால் 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது. அவர்கள் 20 இடங்களுக்கு மேல் பெற்றால், நான் என் பொது வாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். இப்போது சொல்கிறேன் அடுத்து வரும் சட்டசபைத் தேர்தல் வரை கூட இந்த கூட்டணி (ஜேடியு- பாஜக) தாங்காது.
பாஜகவின் தந்திரம்: மக்கள் அவரை நிராகரித்துள்ளனர். அதனால் தான் முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவர் இப்படியெல்லாம் செய்து வருகிறார். பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி என்பது எதிர்க்கட்சிகளின் "இந்தியா" அணியை அழிக்கும் பாஜகவின் தந்திரம் தான்.. அதேநேரம் பாஜக தனித்துப் போட்டியிட்டால் தான் அவர்களுக்குப் பலன் கிடைக்கும்.
பீகாரில் நிதிஷ்குமார் மட்டுமின்றி, பாஜக உட்பட, அனைத்து கட்சிகளும் கூட்டணியை மாற்றிக் கொண்டே தான் இருக்கிறார்கள். பீகாரில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பாஜகவுக்குப் பாதகமாகவும் அமையலாம். ஏனென்றால், பீகாரில் தனித்து போட்டியிட்டிருந்தால் நிதிஷ் எதிர்ப்பு வாக்குகள் பாஜகவுக்கு வந்திருக்கும். ஆனால், இப்போது அந்த வாக்குகள் எங்குச் செல்லும் என்பதை நாம் பொறுத்தே தான் பார்க்க வேண்டும்" என்றார்.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications