கடைசி நேரத்தில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பாக்.! அபிநந்தன் இந்திய வருகை தாமதமான பின்னணி
Recommended Video

டெல்லி: இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், நான்கு மணிநேர கால தாமதத்திற்குப் பிறகு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதற்கான, பின்னணி காரணம் குறித்து தற்போது தகவல் வெளிவந்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் அரசின் ஒரு திரைமறைவு செயல் இதன் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
அமைதி முயற்சியாக, அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். ஆனால், உள்ளுக்குள் அந்த நாட்டு அரசுக்கு வேறு ஒரு திட்டமும் இருந்துள்ளது. கடைசி நேரத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் அதை எடுத்துக் காட்டுவதாக உள்ளன.

பகடைக்காய்
சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் இமேஜை உயர்த்துவதற்காக, அபிநந்தனை, பகடைக்காயாக பயன்படுத்தி உள்ளதாகவே தெரிகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5.20 மணிக்கு வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்ட அபிநந்தன், அதன் பிறகு இரவு 9.20 மணிக்குதான் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தான் பாகிஸ்தானின் ஒரு விளையாட்டு நடந்துள்ளது.

கட்டாய வீடியோ
அபிநந்தனை வாகா எல்லைக்கு அழைத்து வருவதற்கு முன்பாக, அவரிடம், வீடியோ கேமரா முன்னிலையில், பாகிஸ்தான் ராணுவம் குறித்து பெருமையாக பேசும்படி கட்டாயப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மிகச் சிறப்பாக பாகிஸ்தான் ராணுவம் தன்னை கவனித்துக் கொண்டதாக பேசுமாறு வீடியோ பதிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

அரசு, மீடியாவுக்கு எதிராக
மேலும் இந்திய அரசை தாக்கிப் பேச வேண்டும் என்றும், இந்திய மீடியாக்கள்தான் பாகிஸ்தானுக்கு எதிராக வன்மத்தை பரப்புகின்றன என்று சொல்லவேண்டும் என்றும் அவர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு அபிநந்தன் மறுத்துள்ளார். அபிநந்தனுக்கு விடுதலை பற்றிய தகவல் தெரியாது என கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய உள்ள போர்க் கைதி என்ற மனநிலையில்தான் இருந்துள்ளார். எனவே, பாகிஸ்தான் ராணுவம் அவரிடம், தங்களைப் பற்றி புகழ்ச்சியாக சொல்லச் சொல்லி உள்ளதால் வேறு வழியில்லாமல் சில வார்த்தைகளை கூறியதாக தெரிகிறது.

மறுத்த மாவீரன்
சுமார் 90 விநாடிகள் கொண்ட வீடியோவை இதற்காக பாகிஸ்தான் தயாரித்துள்ளது. ஆனால் அபிநந்தன் சரியாக ஒத்துழைக்காத காரணத்தினால் 17 முறை அந்த வீடியோ கட் செய்யப்பட்டு பிறகு எடிட் செய்யப்பட்டு உள்ளது. வீடியோவிற்கு ஒத்துழைக்குமாறு, அபிநந்தன் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தால் வலியுறுத்தப்பட்டும் முழுமையாக அந்த முயற்சி பலிக்கவில்லை.

டிவி சேனல்களுக்கு கொடுத்தனர்
இந்த வீடியோ வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் பாகிஸ்தான் மீடியாக்களுக்கு பகிரப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இரவு ஒன்பது மணி என்பது டிவி சேனல்களின் பிரைம் டைம் ஆகும். அந்த நேரத்தில் இந்த வீடியோவை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உத்தரவிட்ட பாகிஸ்தான் அரசு, அதன் பிறகு அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இதன் மூலம் திரைக்குப் பின்னணியில் ஒரு விளையாட்டை பாகிஸ்தான் அரங்கேற்றியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications