Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக போடும் ஸ்கெட்ச்.. அடிக்கடி கூட்டணி மாறும் நிதிஷ்குமாருக்கு ஓகே சொல்ல என்ன காரணம்! பிண்ணனி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிதிஷ்குமார் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். தொடர்ந்து கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கும் நிதிஷ்குமாருக்கு பாஜக ஏன் ஓகே சொன்னது என்பது குறித்துப் பார்க்கலாம்.

ஜேடியு தலைவர் நிதிஷ் குமாருக்கு பாஜகவின் கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக ஓராண்டுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகக் கூறியிருந்தார். ஆனால், இப்போது அங்கு அரசியல் முழுமையாக மாறிவிட்டது.

 Why BJP okayed Nitish Kumar coming back to alliance Year After Doors Have Closed Jab

பீகார் முதல்வராக 8 முறை பதவியேற்ற நிதிஷ்குமார், இப்போது 9ஆவது முறையாக பாஜக ஆதரவுடன் பதவியேற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் அவர் கூட்டணி மாறுவது இது 5ஆவது முறையாகும்.

க்ளைமாக்ஸ்: பீகாரில் கடந்த சில நாட்களாக நடந்த அரசியல் மாற்றங்கள் இன்று முடிவுக்கு வந்தது. பீகாரில் உள்ள பாஜக எம்எல்ஏக்கள் நிதிஷ் குமாருக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்த நிலையில், நிதிஷ்குமாருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிதிஷ் குமாருடன் மேலும் 8 பேருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணம் வைத்தார். பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர்.

இருப்பினும், இப்போது பலருக்கும் இருக்கும் கேள்வி நிதிஷ்குமாருடன் கூட்டணி வைக்க பாஜக எப்படி ஒகே சொன்னது என்பது தான். இத்தனை முறை கூட்டணி மாறும் நிதிஷ்குமாருக்கு மீண்டும் ஓகே சொல்ல என்ன காணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

காரணம் 1: முதலில் நிதிஷ்குமார் வருகை என்பது "இந்தியா" கூட்டணியைப் பலவீனப்படுத்தும். எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முக்கிய முகமாக நிதிஷ்குமார் பார்க்கப்பட்டார். தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நிதிஷ்குமார் இந்த நேரத்தில் கூட்டணியில் இருந்து வெளியே வருவது "இந்தியா" கூட்டணியைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும். மேலும், அவர்கள் இமேஜையும் அது கடுமையாகப் பாதிக்கும்,.

மறுபுறம் பாஜகவை பொறுத்தவரைப் பீகாரில் இதுவரை "இந்தியா" கூட்டணி வலுவாகவே இருந்தது. அங்கு 40 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், மீண்டும் நிதிஷ்- பாஜக கூட்டணி என்பது எதிர்க்கட்சிகளுக்குச் சவால் மிகுந்த ஒன்றாக மாறும். எனவே, நிதிஷ்குமார் வருகை என்பது இந்தியா கூட்டணிக்குச் சிக்கலைத் தரும் அதே நேரத்தில், பாஜகவுக்கு பலத்தை அதிகரிக்கிறது.

காரணம் 2: அடுத்து பீகார் மாநிலச் சட்டசபை.. என்ன தான் கடந்த கடந்த 10 ஆண்டுகளாக நிதிஷ்குமார் பீகார் முதல்வராக இருந்தாலும் அவரது கட்சி தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. கடந்த 2010இல் நிதிஷ் கட்சி 115 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், அது 2015இல் 71ஆகவும் 2020இல் 43ஆகவும் குறைந்தது. இது நிதிஷ் கட்சிக்கு குறையும் செல்வாக்கைக் காட்டுகிறது. மறுபுறம் பாஜக ஆதரவு அதிகரித்துள்ளது. எனவே, முதல்வராக நிதிஷ்குமார் நீட்டித்தாலும் கண்டிரோல் என்பது பாஜக வசம் தான் இருக்கும்.

காரணம் 3: கடந்த காலங்களில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா எனப் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி கவிழ்ப்பை நடத்தியுள்ளது. ஆனால், இங்கே பீகாரில் நடந்தது வேறு.. இங்கே நிதிஷ்குமார் தான் தொடர்ந்து கூட்டணியை மாற்றி வருகிறார். இது நிதிஷ்குமார் இமேஜை டேமேஜ் செய்யுமே தவிர பாஜக இமேஜை டேமேஜ் செய்யாது.. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்த இமேஜ் முக்கியமானதாகும்.

இதை எல்லாம் கணக்கிட்டே பாஜக மீண்டும் நிதிஷ்குமாருக்கு ஓகே சொல்லி இருக்கும். மீண்டும் நிதிஷ்குமார் கூட்டணிக்குள் வருவதால் பாஜகவுக்கு இழப்பு எதுவும் இல்லை. மாறாகப் பல நன்மைகள் தான் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+