"எல்லாமே பொய்.." ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த விரிவான பதில்
டெல்லி: ஹரியானாவில் தேர்தல் திருடப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, அங்கு ஒரே நபரின் பெயரில் பல வாக்குகள் இருப்பதாகவும் அங்கு மிகப் பெரிய மோசடி நடந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கிடையே ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், ஹரியானா வாக்காளர் பட்டியல் வெளியாகும் போது காங்கிரஸ் எந்தவொரு ஆட்சேபணையும் சொல்லவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
காங்கிரஸின் ராகுல் காந்தி வாக்கு திருட்டு தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பல்வேறு புகார்கள் முன்வைத்து வருகிறார். முதலில் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்கு திருட்டு நடந்ததாகக் கூறியிருந்த ராகுல் காந்தி, இப்போது ஹரியானாவிலும் வாக்கு திருட்டு நடந்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதன் காரணமாகவே காங்கிரஸ் அங்குத் தோல்வி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ராகுல் குற்றச்சாட்டு
2024 ஹரியானா தேர்தல்கள் ஆளும் கட்சிக்குச் சாதகமாக மோசடி நடந்தாக அவர் தெரிவித்தார். அங்குக் காங்கிரஸ் வெறும் 25,000 வாக்குகளாலேயே தோல்வி அடைந்ததாகத் தெரிவித்த அவர், அங்குச் சுமார் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார். 5.21 லட்சம் போலி வாக்காளர்கள், 93,174 செல்லாத வாக்காளர்கள் மற்றும் 19.26 லட்சம் பல்க் வாக்காளர்கள் மூலம் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தேர்தல் ஆணையம்
இதற்கிடையே ஹரியானாவில் வாக்குகள் திருடப்பட்டதாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாகத் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்குச் சில விளக்கங்களைக் கொடுத்துள்ளார். வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவுகள், உயிரிழந்தோர் உள்ளிட்டோரை நீக்கவே "சார்" பணிகள் நடைபெறுவதாகவும் அதை மட்டும் ராகுல் காந்தி எதிர்க்க என்ன காரணம் என தேர்தல் ஆணைய அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேல்முறையீடு செய்யவில்லை
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம், ஹரியானா வாக்காளர் பட்டியல் குறித்து எந்தவொரு அரசியல் கட்சிகளும் மேல்முறையீடு செய்யவில்லை என்றார். ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு எதிராக இப்போது 22 மனுக்கள் மட்டுமே உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களின் பங்கு இது தொடர்பாக ஏன் எந்தவொரு புகாரையும் எழுப்பவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஒரு வாக்காளர் ஏற்கனவே வாக்களித்திருந்தால் அல்லது அந்த நபரின் அடையாளம் குறித்து சந்தேகம் இருந்தால் ஆட்சேபணைகளை எழுப்புவது பூத் ஏஜெண்டுகளின் பொறுப்பு என்று அவர் சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸ் பூத் ஏஜெண்டுகள்
வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது கூட ஒரே நபரின் பெயர் திரும்பத் திரும்ப வந்திருந்தால்.. அதைத் தடுக்கக் காங்கிரஸ் பூத் ஏஜெண்டுகள் எந்தவொரு கோரிக்கை அல்லது ஆட்சேபணையையும் எழுப்பவில்லை என்றும் இது தொடர்பாக எந்த மேல்முறையீடுகளையும் செய்யவில்லை என்றும் தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தார்.
மேலும், ஒருவேளை இரட்டைப் பதிவுகள் இருந்திருந்தாலும் கூட அந்த வாக்காளர்கள் நிச்சயம் பாஜகவுக்குத் தான் வாக்களித்தார்கள் என்பதை ராகுல் காந்தி எப்படி உறுதியாகக் கூற முடியும் என்றும், இந்த வாக்காளர்கள் காங்கிரசுக்கு கூட வாக்களித்திருக்கலாம் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரி கருத்து தெரிவித்தார்.
-
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications