இரவோடு இரவாக டெல்லி போன ஆளுநர் ரவி.. அங்கிருந்து திடீரென ரயில் ஏறி.. "ரூட்டை" மாற்றி.. பிளானே வேற!
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லி சென்ற நிலையில் அங்கு தலைவர்கள் யாரையும் சந்திக்காமல் தவிர்த்து இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி நேற்று இரவு டெல்லி சென்றார். இரவு 8.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.
நடுஇரவில் டெல்லியில் இறங்கியவர்.. அங்கு இரவு ஓய்வு.எடுத்தார். அவரின் டெல்லி பயணத்திற்கு பின் வேறு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக ஆளுநர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

என்ன காரணம்
குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடியும் நிலையில், இந்த வருடம் ஜூலை மாதம் 18ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில்தான் ஆளுநர் ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இதனால் அவர் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஏதேனும் ஆலோசிக்க உள்ளாரா என்ற கேள்வி எழுந்தது. இதை பற்றி அவர் ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

பெயர் அடிபட்டது
ஏனென்றால் ஆர். என் ரவி பெயரும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் லிஸ்டில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது. இது பற்றி பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக சில அரசியல் தரப்பு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்தன. அவரின் டெல்லி பயணம் நாளையோடு முடிகிறது. நாளை இரவு அவர் மீண்டும் சென்னை திரும்புவார். அதற்கு முன் இந்த சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நடந்தது என்ன?
ஆனால் இந்த யுகங்களை பொய்யாக்கி.. ஆளுநர் ரவி தனது ரூட்டை மாற்றி உள்ளார். ஆர்.என் ரவி டெல்லி சென்ற நிலையில் அங்கு தலைவர்கள் யாரையும் சந்திக்காமல் தவிர்த்து இருப்பதாக கூறப்படுகிறது. அவர் இன்று காலை ரயிலில் டெல்லியில் இருந்து பீகார் செல்கிறார். பீகார் அவரின் சொந்த ஆகும். அவரின் இந்த பயணம் பர்சனல் பயணம் என்கிறார்கள். இது அரசியல் ரீதியான பயணம் கிடையாது.

கோவில்
பீகாரில் இருக்கும் பாட்னா கோவில் ஒன்றில் அவர் வழிபாடு நடத்த உள்ளார். அங்கு இருக்கும் தேவி கோவில் ஒன்றில் இவர் பூஜை செய்ய இருக்கிறாராம். இங்கு அவர் அடிக்கடி செல்வது வழக்கம். தமிழ்நாடு ஆளுநர் ஆன பின் இவர் இங்கே வழிபாடு செய்யவில்லை. இந்த நிலையில் இந்த முறை வழிபாடு நடத்த முடிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளார் என்கிறார்கள். மற்றபடி இவரின் பயணத்திற்கு பின் வேறு அதிகாரபூர்வ காரணங்கள் இல்லை என்றே ஆளுநர் மாளிகை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications