மொட்டை தலை.. காவி கெட்டப்பில் போலீஸிடம் பிடிபட்ட சிவசங்கர் பாபா!.. அடையாளத்தை மறைக்க முயற்சி?
டெல்லி: உத்தரகாண்டில் சிவசங்கர் பாபாவை விசாரிக்க தனிப்படை சென்றதை அடுத்து அங்கிருந்து தப்பிய பாபா, காசியாபாத்தில் மொட்டை தலையுடன் போலீஸார் கைது செய்துள்ளனர். தேடுதல் வேட்டையில் அடையாளத்தை மறைக்க மொட்டை அடித்திருந்தாரா என சந்தேகம் எழுந்துள்ளது.
Recommended Video
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே ராமராஜ்ஜியம் என்ற பகுதியில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.
முன்னாள் மாணவிகள் ஆதாரத்துடன் சமர்ப்பித்த புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தப்பியோட்டம்
இந்த நிலையில் சிவசங்கர் பாபா தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் உத்தரகாண்டில் டேராடூனில் நெஞ்சுவலி காரணமாக ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பாபா தரப்பினர் அதற்கான சான்றுகளையும் புகைப்படங்களையும் போலீஸுக்கு சமர்ப்பித்தனர்.

வெளிநாடு
இந்தநிலையில் டேராடூனில் உள்ள பாபாவை நேரடியாக விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் அங்கு விரைந்தனர். மேலும் அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் போலீஸ் வருவது தெரிந்து டேராடூனில் இருந்து தப்பியுள்ளார் சிவசங்கர் பாபா.

காசியாபாத்
இந்த நிலையில் அவர் டெல்லி- உத்தரப்பிரதேசம் எல்லை அருகே காசியாபாத்தில் போலீஸாரால் மடக்கி பிடித்து கைது செய்யப்பட்டார். அவர் அப்போது மஞ்சள் நிறத்தில் சட்டையும் காவி வேட்டியும் அணிந்திருந்தார். மேலும் மொட்டை அடித்துக் கொண்டிருந்தார்.

வெளிநாடு
திடீரென பாபா ஏன் மொட்டை அடித்தார் என தெரியவில்லை. ஒரு வேளை போலீஸார் அடையாளம் கண்டுக் கொள்ளாமல் இருக்க அவ்வாறு செய்தாரா. இல்லை வெளிநாடு தப்பி செல்லும் திட்டத்தில் அவர் தன் தலையை மொட்டை அடித்தாரா என தெரியவில்லை.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications