மொட்டை தலை.. காவி கெட்டப்பில் போலீஸிடம் பிடிபட்ட சிவசங்கர் பாபா!.. அடையாளத்தை மறைக்க முயற்சி?
டெல்லி: உத்தரகாண்டில் சிவசங்கர் பாபாவை விசாரிக்க தனிப்படை சென்றதை அடுத்து அங்கிருந்து தப்பிய பாபா, காசியாபாத்தில் மொட்டை தலையுடன் போலீஸார் கைது செய்துள்ளனர். தேடுதல் வேட்டையில் அடையாளத்தை மறைக்க மொட்டை அடித்திருந்தாரா என சந்தேகம் எழுந்துள்ளது.
Recommended Video
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே ராமராஜ்ஜியம் என்ற பகுதியில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.
8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு
முன்னாள் மாணவிகள் ஆதாரத்துடன் சமர்ப்பித்த புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தப்பியோட்டம்
இந்த நிலையில் சிவசங்கர் பாபா தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் உத்தரகாண்டில் டேராடூனில் நெஞ்சுவலி காரணமாக ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பாபா தரப்பினர் அதற்கான சான்றுகளையும் புகைப்படங்களையும் போலீஸுக்கு சமர்ப்பித்தனர்.
வெளிநாடு
இந்தநிலையில் டேராடூனில் உள்ள பாபாவை நேரடியாக விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் அங்கு விரைந்தனர். மேலும் அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் போலீஸ் வருவது தெரிந்து டேராடூனில் இருந்து தப்பியுள்ளார் சிவசங்கர் பாபா.
காசியாபாத்
இந்த நிலையில் அவர் டெல்லி- உத்தரப்பிரதேசம் எல்லை அருகே காசியாபாத்தில் போலீஸாரால் மடக்கி பிடித்து கைது செய்யப்பட்டார். அவர் அப்போது மஞ்சள் நிறத்தில் சட்டையும் காவி வேட்டியும் அணிந்திருந்தார். மேலும் மொட்டை அடித்துக் கொண்டிருந்தார்.
வெளிநாடு
திடீரென பாபா ஏன் மொட்டை அடித்தார் என தெரியவில்லை. ஒரு வேளை போலீஸார் அடையாளம் கண்டுக் கொள்ளாமல் இருக்க அவ்வாறு செய்தாரா. இல்லை வெளிநாடு தப்பி செல்லும் திட்டத்தில் அவர் தன் தலையை மொட்டை அடித்தாரா என தெரியவில்லை.