மோடி ஓய்வு பெற்றால் புதிய பிரதமர் மகாராஷ்டிராவின் நிதின் கட்காரி? சிவசேனா சஞ்சய் ராவத் பரபர தகவல்
டெல்லி: நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி ஓய்வு பெற்றால் புதிய பிரதமராக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஏற்கனவே பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்த நிதின் கட்காரிதான் நாட்டின் அடுத்த பிரதமராக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் தேர்வு செய்யப்படக் கூடும் என்பதையே சஞ்சய் ராவத் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டு 75 வயது நிறைவடைகிறது; பாஜகவின் நடைமுறைகளின்படி 75 வயது நிறைவடைந்த ஒருவர் எந்த ஒரு பதவியும் வகிக்க முடியாது; ஆகையால் பிரதமர் மோடி தாம் பதவியில் இருந்து விலகும் ஓய்வு முடிவை அறிவிக்கவே நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு நேற்று சென்றார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர்கள், புதிய பிரதமர் யார் என்பது குறித்து ரகசிய ஆலோசனை நடத்தினர். மோடிக்குப் பின்னர் புதிய பிரதமராக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார் சஞ்சய் ராவத்.

சஞ்சய் ராவத்தின் இந்த கருத்தை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியே 2029-ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர்தான் அடுத்த பிரதமர் ஏன சஞ்சய் ராவத் கூறியிருப்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளது. நாட்டின் பிரதமர் பதவிக்கு ஏற்கனவே தம்மை தேர்வு செய்ய விரும்பினார்கள்; ஆனால் நான் மறுத்துவிட்டேன் என ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு மிக நெருக்கமான மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார்.
இதனால் பிரதமர் மோடி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்ல், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நிதின் கட்காரியே புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவாரா? என்கிற விவாதம் களைகட்டி இருக்கிறது.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications