Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி ஓய்வு பெற்றால் புதிய பிரதமர் மகாராஷ்டிராவின் நிதின் கட்காரி? சிவசேனா சஞ்சய் ராவத் பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி ஓய்வு பெற்றால் புதிய பிரதமராக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஏற்கனவே பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்த நிதின் கட்காரிதான் நாட்டின் அடுத்த பிரதமராக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் தேர்வு செய்யப்படக் கூடும் என்பதையே சஞ்சய் ராவத் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டு 75 வயது நிறைவடைகிறது; பாஜகவின் நடைமுறைகளின்படி 75 வயது நிறைவடைந்த ஒருவர் எந்த ஒரு பதவியும் வகிக்க முடியாது; ஆகையால் பிரதமர் மோடி தாம் பதவியில் இருந்து விலகும் ஓய்வு முடிவை அறிவிக்கவே நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு நேற்று சென்றார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர்கள், புதிய பிரதமர் யார் என்பது குறித்து ரகசிய ஆலோசனை நடத்தினர். மோடிக்குப் பின்னர் புதிய பிரதமராக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார் சஞ்சய் ராவத்.

Narendra Modi Rss bjp Nitin Gadkari

சஞ்சய் ராவத்தின் இந்த கருத்தை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியே 2029-ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர்தான் அடுத்த பிரதமர் ஏன சஞ்சய் ராவத் கூறியிருப்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளது. நாட்டின் பிரதமர் பதவிக்கு ஏற்கனவே தம்மை தேர்வு செய்ய விரும்பினார்கள்; ஆனால் நான் மறுத்துவிட்டேன் என ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு மிக நெருக்கமான மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார்.

இதனால் பிரதமர் மோடி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்ல், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நிதின் கட்காரியே புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவாரா? என்கிற விவாதம் களைகட்டி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+