2019ல் அம்மா ஆசையா தச்சுக் கொடுத்த சிவப்பு கலர் பட்ஜெட் பை.. இம்முறையும் கொண்டு வருவாரா நிர்மலா?
Recommended Video
டெல்லி: பட்ஜெட் என்றாலே அது சூட்கேஸில் கொண்டு வருவதுதான் என்ற மரபை கடந்த நிதியாண்டில் மாற்றிவிட்டு தன் அம்மா தைத்து கொடுத்த சிகப்பு நிற பையில் பட்ஜெட் உரைகளை கொண்டு வந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த முறையும் அதே பையுடன் அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பட்ஜெட் அறிக்கைகள் எப்போதும் சூட்கேஸில்தான் கொண்டு செல்வது வழக்கம். இது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரபாகும். இந்த மரபை கடந்த 1860-ஆம் ஆண்டு பிரிட்டன் அரசவையில் வில்லியம் கிளாட்ஸ்டோன் அறிமுகம் செய்தார்.

பட்ஜெட் தாக்கல்
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ததை அடுத்து கடந்த ஆண்டு வரை , இன்னும் ஏன் கடந்த ஆண்டு வெளியான இடைக்கால பட்ஜெட் வரை அதே நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் மத்தியில் 2-ஆவது முறையாக ஆட்சியை பிடித்த பாஜக கடந்த ஜூலை மாதம் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

பழைய பழக்கம்
அப்போது நிதி அமைச்சகத்திலிருந்து வெளியே வந்த நிர்மலா சீதாராமனின் கையில் இருந்ததை பார்த்து செய்தியாளர்களுக்கு ஆச்சரியம். ஏனெனில் வழக்கமாக நிதி அமைச்சரின் கையில் பட்ஜெட் நாளன்று இருக்கும் பெட்டிக்கு பதிலாக சிகப்பு நிறத்தினாலான பட்ஜெட் பை இருந்தது. இந்த பையை கொண்டு வந்ததன் மூலம் பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழைய பழக்கத்தை மாற்றினார் நிர்மலா.

பூஜை
இந்த பை குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில் சூட்கேஸ் எடுத்துச் செல்லும் நடைமுறை ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்படுகிறது. அது எனக்கு பிடிக்கவில்லை. இதனால் பட்ஜெட் உறையை தன்னுடைய அம்மா, அவரது கைகளால் தைத்து கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் அந்த பையை மும்பை சித்தி விநாயகர் கோயில் மற்றும் மகாலட்சுமி கோயிலில் வைத்து பூஜை செய்து கொடுத்தார்.

அரசு முத்திரை
எனினும் அந்த பை நம் வீட்டு பை போல் இல்லாமல் இருக்கவும் அரசினுடையது என்ற அடையாளம் காணவும் அதில் அசோக சக்கரத்தை பதித்தேன் என தெரிவித்தார். இந்த நிலையில் நாளை 2020- 2021-ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் கடந்த ஆண்டை போல் சிகப்பு பையையே நிர்மலா பயன்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications