டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்

Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்ரீநகர் விமான தளத்திலிருந்து விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துமீறி காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை, மிக்-21 வகை போர் விமானத்தில், விரட்டிச் சென்றபோது, பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர் விங் கமாண்டர் அபிநந்தன்.

Wing Commander Abhinandan Varthaman transfered from Srinagar airbase

சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக, அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இதையடுத்து அவருக்கு உடல் பரிசோதனைகளும், சிகிச்சைகளும் செய்யப்பட்டன. மீண்டும் அபிநந்தன் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பழையபடி காஷ்மீரின், ஸ்ரீநகர் விமான தளத்தில் பணிக்கு அமர்த்தப்படுவார் என்று கூறப்பட்டது.

வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர் வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்

ஆனால், அபிநந்தனுக்கு காஷ்மீர் தளத்தில் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதும், விமானப்படை, அவரை மேற்கு மண்டலத்திற்கு பணிமாற்றம் செய்துள்ளது. அவர் பணியாற்றப்போகும் இடம் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

English summary
Indian Air Force transfers Wing Commander Abhinandan Varthaman out of the Srinagar airbase amid concerns over his security in Kashmir valley.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X