உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 18 கோடியை நெருங்கியது; உயிரிழப்புகள் 38,88,332 ஆக அதிகரிப்பு!
டெல்லி: உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 கோடியை நெருங்கியுள்ளது. உலகின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 38,88,332 ஆகும்.
உலக நாடுகளில் கொரோனா 2-வது அலை ஓய்ந்து வருகிறது. சில நாடுகளில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் உலகின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,95,33,408. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 38,88,332. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,41,59,575.

ஒருநாள் பாதிப்பில் முதலிடம்
ஒருநாள் பாதிப்பில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 41,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பிரேசிலில் 24 மணிநேரத்தில் 899 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் சற்று குறைவு
ஒருநாள் பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 39,096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 846 பேர் ஒருநாளில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 6,70,998 ஆக குறைந்துள்ளது.

கேரளாவில் அதிகம்
இந்தியாவில் திங்கள்கிழமையன்று கேரளாவில் 7,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இம்மாநிலத்தில் 94 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். கேரளாவில் 13,596 பேர் நேற்று கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் ஆகினர்.

தமிழக பாதிப்பு
தமிழகத்தில் நேற்று 7,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் திங்கள்கிழமையன்று மட்டும் 189 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் நேற்று 15,281 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர்.

மகாராஷ்டிரா மரணங்கள் அதிகம்
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மரணங்கள் அதிகமாக இருக்கின்றன. மகாராஷ்டிராவில் 6,270 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 352 ஆக இருந்தது. மகாராஷ்டிராவில் 13,758 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications