உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,991- 4,901 பேர் மரணம்
டெல்லி: உலக நாடுகளில் நேற்று மட்டும் 3,22,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உலக நாடுகளில் கொரோனாவால் நேற்று 4,901 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,041 ஆக பதிவாகி உள்ளது.
உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை பாதிப்பு தொடர்ந்து வருகிறது. உலக நாடுகளில் நேற்று 3,22,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் 3,36,071 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். மேலும் 4,901 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர்.

உலக நிலவரம்
உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 23,25,95,152. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 20,92,18,574. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,761,798.

அமெரிக்கா, இங்கிலாந்து
அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியதாக இருந்தது. கடந்த சில நாட்களாக இது குறைந்து வருகிறது. அமெரிக்காவில் நேற்று 24,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 259 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். உலக அளவில் இங்கிலாந்தில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி இருக்கிறது. இங்கிலாந்தில் 32,417 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்தியாவில் பாதிப்பு
இந்தியாவில் 26,041 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 276 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதில் கேரளாவில் மட்டும் 15,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. கேரளாவில் நேற்று 165 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,36,78,786. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,29,31,972. இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,47,194 ஆக உள்ளது. நாட்டில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 2,99,620 ஆகும். இந்தியாவில் இதுவரை 86,01,59,011 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 38,18,362 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ரஷ்யாவில் அதிக மரணங்கள்
ரஷ்யாவில்தான் கொரோனா மரணங்கள் மிக அதிக அளவில் பதிவாகி வருகிறது. ரஷ்யாவில் நேற்று மட்டும் 805 பேர் கொரோனாவால் மரணித்தனர். மெக்சிகோவில் 596 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியாகினர். ஈரானில் 288; மலேசியாவில் 278 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications