டானுக்கெல்லாம் டான்! உலகின் சக்திவாய்ந்த கடற்படை! இந்தியாவை மிஞ்சிய குட்டி நாடுகள்! அப்போ பாக்.,?
டெல்லி: உலகின் சக்திவாய்ந்த கடற்படைகள் குறித்த 2026 ஆம் ஆண்டுக்கான புதிய தரவரிசையை World Directory of Modern Warships and Submarines (WDMMW) அமைப்பு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 40 நாடுகளின் கடற்படைகளை ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில், இந்தியா முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், சீனா தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளதோடு, பாகிஸ்தானும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் சக்திவாய்ந்த கடற்படைகள் குறித்த வெறும் கப்பல்களின் எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படவில்லை. மாறாக, ஒவ்வொரு நாட்டின் கடற்படையும் எதிர்கால போர்களை எதிர்கொள்ளும் திறன், நவீனமயமாக்கல் திட்டங்கள், தாக்குதல் மற்றும் பாதுகாப்பு திறன், நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தளவாட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக WDMMW "True Value Rating" எனப்படும் மதிப்பீட்டு முறையை பயன்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. உலகில் எந்த நாட்டுக்கும் இல்லாத அளவிற்கு சக்திவாய்ந்த கடற்படையைக் கொண்ட அமெரிக்காவிடம் 11 விமான தாங்கி கப்பல்கள் உள்ளன.

2026 கடற்படை தரவரிசை
உலகின் எந்த மூலையிலும் குறுகிய நேரத்தில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் அமெரிக்க கடற்படைக்கு உள்ளது. அதனுடைய தொழில்நுட்ப முன்னேற்றம், அணு சக்தி கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் உலகம் முழுவதும் பரந்துள்ள கடற்படை தளங்கள் ஆகியவை அதன் முதலிடத்தை உறுதிப்படுத்துகின்றன. அமெரிக்காவுக்கு அடுத்ததாக சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஒரு தசாப்தத்தில் சீனா தனது கடற்படையை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. சில வகை கப்பல்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை விட கூட அதிகமாக சீனாவிடம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
WDMMW பட்டியல்
இருப்பினும், ஒட்டுமொத்த போர்திறன், அனுபவம் மற்றும் உலகளாவிய செயல்பாட்டு திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீனா இரண்டாம் இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு கடும் சவாலாக சீனா மாறும் என ராணுவ நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த தரவரிசையில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தியாவை விட முதல் இடங்களில் இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகள் தங்களின் கடற்படைகளை நவீனமயமாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
உலகின் சக்திவாய்ந்த கடற்படைகள்
குறிப்பாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை உயர் தொழில்நுட்ப கப்பல்கள், மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை விரைவாக உருவாக்கி வருவது இந்த முன்னேற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை, கடற்படை வலிமை குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், இந்த மதிப்பீட்டில் முதல் ஐந்தில் இடம் பெற முடியாமல் போனது பாதுகாப்பு வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கடற்படை
இந்தியா தற்போது தனது கடற்படையை விரிவுபடுத்தி வரும் நிலையிலும், சில திட்டங்கள் தாமதம், நவீன கப்பல்களின் எண்ணிக்கை மற்றும் உலகளாவிய செயல்பாட்டு திறன் போன்ற அம்சங்களில் இன்னும் மேம்பாடு தேவைப்படுவதாக இந்த பட்டியல் சுட்டிக்காட்டுகிறது. அதே நேரத்தில், பாகிஸ்தானின் கடற்படை வளர்ச்சியும் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் தனது கடற்படையை நவீனமயமாக்கி வருவதாகவும், புதிய கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் சேர்க்கப்பட்டு வருவதாகவும் WDMMW குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் கடற்படை
இது தென் ஆசியப் பிராந்தியத்தில் கடற்படை சமநிலையை மாற்றக்கூடும் என ராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில், 2026 ஆம் ஆண்டுக்கான இந்த தரவரிசை, உலக நாடுகள் கடற்படை வலிமைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதோடி, எதிர்கால போர்கள் பெரும்பாலும் கடல் வழி ஆதிக்கத்தை மையமாகக் கொண்டு அமையலாம் என்பதால், உலக நாடுகள் தங்களின் கடற்படைகளை தொடர்ந்து வலுப்படுத்தும் நிலை உருவாகியுள்ளதாகக் கூறுகின்றனர் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான்












Click it and Unblock the Notifications