உலக சமஸ்கிருத தினம்.. சமஸ்கிருத வாக்கியத்தை CelebratingSanskri ஹேஷ்டேக்குடன் பகிர மோடி வேண்டுகோள்!
டெல்லி: உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சமூக வலைதளங்களில் சமஸ்கிருத வாக்கியத்துடன் #CelebratingSanskri ஹேஷ்டோக் போட்டு கொண்டாடவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சமஸ்கிருதத்தில் ஆர்வம் உள்ள அனைவரையும் பிரதமர் மோடி பாராட்டினார். இதைக் கொண்டாடும் வகையில் அனைவரும் சமஸ்கிருதத்தில் ஒரு வாக்கியத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியான பதிவுகளில் பிரதமர் கூறியதாவது:
உலக சமஸ்கிருத தின நல்வாழ்த்துகள். இதில் ஆர்வமுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன். சமஸ்கிருதத்துடனான இந்தியாவின் உறவு தனித்துவமானது.
"உலக சமஸ்கிருத தின நல்வாழ்த்துகள். இதில் ஆர்வம் உள்ள அனைவரையும் பாராட்டுகிறேன். சமஸ்கிருதத்துடன் இந்தியாவுக்கு மிகவும் சிறப்பான தொடர்பு உள்ளது. இந்த மகத்தான மொழியைக் கொண்டாடும் வகையில், சமஸ்கிருதத்தில் ஒரு வாக்கியத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். கீழே உள்ள பதிவில், ஒரு சமஸ்கிருத வாக்கியத்தை அனைவரும் பகிர வேண்டும். #CelebratingSanskrit என்பதை பயன்படுத்த மறவாதீர்கள்.
"अग्रिमदिनेषु भारतं G20 संमेलनस्य आतिथ्यं करिष्यति। संपूर्णविश्वतः जनाः भारतम् आगमिष्यन्ति, अस्माकं श्रेष्ठसंस्कृतिं ज्ञास्यन्ति च।
(வரும் நாட்களில் ஜி20 உச்சிமாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. உலகெங்கிலும் இருந்து மக்கள் இந்தியாவுக்கு வந்து நமது சிறந்த கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்வார்கள். #CelebratingSanskrit" - இப்படி பகிர வேண்டும் என்பது மோடியின் வேண்டுகோள்). இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
विश्वसंस्कृतदिवसे मम शुभकामनाः। अहं सर्वान् अभिनन्दामि ये एतदर्थं भावुकाः सन्ति। संस्कृतेन सह भारतस्य संबन्धः विशिष्टः।
— Narendra Modi (@narendramodi) August 31, 2023











Click it and Unblock the Notifications