Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1 வயது குழந்தையின் உயிர் காக்க உதவுங்களேன்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: இதயத்தில் பிரச்சனையுடன் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு வயது குழந்தையை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

தர்மபுரி மாவட்டம் கோலகம்பட்டியைச் சேர்நத்வர் மாரிமுத்து. தினசரி கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார். கட்டிடத் தொழிலாளியான இவரது மனைவி ராஜேஸ்வரி.

Help to save 1 year old Thanushree from serious Heart problem

இவர்களுக்கு தனுஸ்ரீ என்ற குழந்தை உள்ளது. தனுஸ்ரீக்கு 6 மாதம் இருக்கும் போது எளிதில் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டதை அவருடைய தாயார் ராஜேஸ்வரி கண்டுபிடித்தார்,

குழந்தைக்கு சாப்பிடுவதை விழுங்குவதில் சிக்கல் இருப்பதையும், அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதையும் கண்டு அவர் வேதனைப்பட்டார். அப்போது குழந்தை தனுஸ்ரீக்கு இதயப் பிரச்சினை இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை.

Help to save 1 year old Thanushree from serious Heart problem

குழந்தைக்கு ஒரு சமயம் மூச்சுத் திணறல் அறிகுறிகள் இருந்ததால் , உடனடியாக தனுஸ்ரீயை தூக்கிக்கொண்டு தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் குழந்தையின் நிலைமை சரியாகவில்லை. அதன்பிறகு மாரிமுத்து-ராஜேஸ்வரி தம்பதி பல தனியார் மருத்துவர்களைச் சந்தித்தார்கள். இறுதியாக பெங்களூருக்குச் சென்றார்கள். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இதயப் பிரச்சினை இருப்பதாகவும், அவளுக்கு 2 வயதாகும்போதுதான் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

Help to save 1 year old Thanushree from serious Heart problem

இதனிடையே கொரோனா மற்றும் கொரோனாவை தடுக்க போடப்பட்ட லாக்டவுன் காரணமாக குழந்தை தனுஸ்ரீக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை சேகரிக்கவும் அவர்களால் முடியவில்லை.

அண்மையில் தர்மபுரிக்கு மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் முகாம் நடத்தினர். அவர்கள் முகாமில் குழந்தை தனுஸ்ரீயின் உடல் நிலையை பரிசோதித்தார்கள். தனுஸ்ரீக்கு பிறவியிலேயே இதயத்தில் கடுமையான குறைபாடு இருப்பதை உறுதி செய்தனர்.

Help to save 1 year old Thanushree from serious Heart problem

குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய மருந்துகள் உள்பட ரூ.2,80,000 தேவை என்று கூறினர். ஆனால் கூலித்தொழிலாளியான மாரிமுத்துவால் இந்த பணத்தை சம்பாதிக்க வாய்ப்பே இல்லை என்கிற நிலையில் குழந்தைய காப்பாற்ற முடியாமல் தவித்து வருகிறார். அவரிடம் சொத்துக்களும் இல்லை. அன்றாடம் வேலை செய்தால்தான் சாப்பாட்டுக்கே வழி என்ற நிலையில் இருக்கிறார். அவருக்கு இந்த நேரத்தில் உறவுகளோ நிதி கொடுத்து உதவ தயாராக இல்லை,.

எனவே கடினமான காலங்களில் தங்களுக்கு உதவ வேண்டும் என மனிதநேயமுள்ள, உன்னதமான, இரக்கமுள்ள மக்களுக்கு மாரிமுத்து கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தை தனுஸ்ரீயை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். நீங்கள் செய்யும் சிறு உதவியை அந்த குழந்தையை காப்பாற்ற உதவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+