1 வயது குழந்தையின் உயிர் காக்க உதவுங்களேன்
தர்மபுரி: இதயத்தில் பிரச்சனையுடன் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு வயது குழந்தையை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
தர்மபுரி மாவட்டம் கோலகம்பட்டியைச் சேர்நத்வர் மாரிமுத்து. தினசரி கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார். கட்டிடத் தொழிலாளியான இவரது மனைவி ராஜேஸ்வரி.

இவர்களுக்கு தனுஸ்ரீ என்ற குழந்தை உள்ளது. தனுஸ்ரீக்கு 6 மாதம் இருக்கும் போது எளிதில் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டதை அவருடைய தாயார் ராஜேஸ்வரி கண்டுபிடித்தார்,
குழந்தைக்கு சாப்பிடுவதை விழுங்குவதில் சிக்கல் இருப்பதையும், அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதையும் கண்டு அவர் வேதனைப்பட்டார். அப்போது குழந்தை தனுஸ்ரீக்கு இதயப் பிரச்சினை இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை.

குழந்தைக்கு ஒரு சமயம் மூச்சுத் திணறல் அறிகுறிகள் இருந்ததால் , உடனடியாக தனுஸ்ரீயை தூக்கிக்கொண்டு தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் குழந்தையின் நிலைமை சரியாகவில்லை. அதன்பிறகு மாரிமுத்து-ராஜேஸ்வரி தம்பதி பல தனியார் மருத்துவர்களைச் சந்தித்தார்கள். இறுதியாக பெங்களூருக்குச் சென்றார்கள். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இதயப் பிரச்சினை இருப்பதாகவும், அவளுக்கு 2 வயதாகும்போதுதான் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதனிடையே கொரோனா மற்றும் கொரோனாவை தடுக்க போடப்பட்ட லாக்டவுன் காரணமாக குழந்தை தனுஸ்ரீக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை சேகரிக்கவும் அவர்களால் முடியவில்லை.
அண்மையில் தர்மபுரிக்கு மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் முகாம் நடத்தினர். அவர்கள் முகாமில் குழந்தை தனுஸ்ரீயின் உடல் நிலையை பரிசோதித்தார்கள். தனுஸ்ரீக்கு பிறவியிலேயே இதயத்தில் கடுமையான குறைபாடு இருப்பதை உறுதி செய்தனர்.

குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய மருந்துகள் உள்பட ரூ.2,80,000 தேவை என்று கூறினர். ஆனால் கூலித்தொழிலாளியான மாரிமுத்துவால் இந்த பணத்தை சம்பாதிக்க வாய்ப்பே இல்லை என்கிற நிலையில் குழந்தைய காப்பாற்ற முடியாமல் தவித்து வருகிறார். அவரிடம் சொத்துக்களும் இல்லை. அன்றாடம் வேலை செய்தால்தான் சாப்பாட்டுக்கே வழி என்ற நிலையில் இருக்கிறார். அவருக்கு இந்த நேரத்தில் உறவுகளோ நிதி கொடுத்து உதவ தயாராக இல்லை,.
எனவே கடினமான காலங்களில் தங்களுக்கு உதவ வேண்டும் என மனிதநேயமுள்ள, உன்னதமான, இரக்கமுள்ள மக்களுக்கு மாரிமுத்து கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தை தனுஸ்ரீயை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். நீங்கள் செய்யும் சிறு உதவியை அந்த குழந்தையை காப்பாற்ற உதவும்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications