இது லிஸ்ட்டிலேயே இல்லையேப்பா.. சுப்பிரமணியின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா!
சைக்கிளில் சென்ற சிறுவனை போலீஸார் தடுத்து நிறுத்தி உள்ளனர்
Recommended Video
தர்மபுரி: ஊரெல்லாம் இந்த போலீஸ்காரின் கடமை உணர்ச்சியை பற்றிதான் பேசி கொண்டிருக்கிறார்கள்.. சைக்கிளில் போன சிறுவனை மடக்கி பிடித்து அலப்பறை தந்துள்ளார் இந்த போலீஸ்காரர்!
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர்தான் சுப்ரமணி. வழக்கம்போல வாகன சோதனையில் மற்ற போலீசாருடன் ஈடுபட்டு கொண்டிருந்தார் சுப்பிரமணி.
யார், யார் ஹெல்மட் போடலையோ, அவர்களை வளைத்து வளைத்து பிடித்து கொண்டும், அவர்களின் ஆவணங்களை சோதனை செய்தும் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து ஒரு பள்ளி மாணவன் சைக்கிளில் போய் கொண்டிருந்தான். ஒரு கையில் செல்போனில் பேசி கொண்டே நகர்ந்து சென்றான். அவனை தடாலடியாக பாய்ந்து பிடித்தார் சுப்பிரமணி.

சிறுவன்
அது ஒரு இலவச சைக்கிள்... அதனை அலேக்காக தூக்கி ஒரு ஓரமாக வைத்து, பூட்டும் போட்டுவிட்டார். இதையெல்லாம் பார்த்த சிறுவனுக்கு எதுவும் புரியவில்லை. ஏன் போலீஸ்கார் இப்படி செய்கிறார் என்று மலங்க மலங்க விழித்து நின்றான்.

வீடியோ
சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி சிறுவனை வழிமறித்து சைக்கிளை பூட்டி பறிமுதல் செய்து ஓரமாக நிற்க வைக்கும் இந்த வீடியோ வைரலாகிறது. அதில், சிறுவனிடம் சுப்பிரமணி கெடுபிடி செய்து கொண்டிருந்த சமயம், ஹெல்மட் போடாமலும், செல்போனில் பேசிக் கொண்டே பைக் ஓட்டிக் கொண்டும் சிலர் அந்த பக்கமாக சென்று கொண்டிருப்பதை காண முடிகிறது.

பொதுமக்கள்
அவரை விட்டுவிட்டு, சுப்பிரமணி சிறுவனிடம் கெடுபிடி செய்தது கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தக்கும் மேல்... அதுவரை சைக்கிளை அவனிடம் தரவே இல்லை.. காரணமும் சொல்லவில்லை! சிறுவன் தன் வீட்டுக்கு போனை போட்டு, குடும்பத்தினரை வரவழைத்து.. அதன்பின்னரே சைக்கிள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்த்த பொதுமக்கள், சைக்கிளில் செல்லும் நபர்களுக்கும் கோர்ட்டில் ஏதாவது புதுசா சட்டம் இயற்றப்பட்டு உள்ளதா? என்று கேள்வி எழுப்பி கொண்டே சென்றனர்.

வீடியோ
இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் சுப்பிரமணி 6 மாசத்துக்கு மேல வேலை பார்த்தது இல்லை, அதனால்தான் அவர் அடிக்கடி ரான்ஸ்பர் செய்யப்படுகிறார் என்றும் காவல்துறை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. என்ன இருந்தாலும், வாகன சோதனையில் சைக்கிளை புடுங்கி வைத்து கொண்டது கொஞ்சம் ஓவர்தான் என்கிறார்கள் மக்கள்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications