திமுகவுக்கா?.. நானா?.. நெவர்!.. நான் சசிகலா, டிடிவியின் விசுவாசியாக்கும்!!- தங்கதமிழ்ச்செல்வன்
ஒகேனக்கல்: நான் சசிகலா, தினகரனின் விசுவாசி. எனவே அதிமுகவுக்கோ திமுகவுக்கோ நான் கட்சி தாவ மாட்டேன். என் பணி அமமுகவில் தொடரும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
தினகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த செந்தில் பாலாஜி அண்மையில் அவரிடமிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதனால் தினகரன் கட்சியினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதுபோதா குறைக்கு தங்கதமிழ்ச்செல்வனும் திமுகவுக்கு தாவுகிறார் என்ற தகவல் அமமுக நிர்வாகிகளை மேலும் கவலைக்குள்ளாகியது.
கருத்து வேறுபாடும்
இதுகுறித்து தங்கதமிழ்ச்செல்வன் வார இதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் விசுவாசமாக இருந்து கட்சி பணியாற்றுகிறேன். இதில் மாறுப்பட்ட கருத்துக்கு வேலையே இல்லை.
செல்ல மாட்டேன்
வேண்டுமென்றே அது போன்ற பொய்யான ஒரு தகவலை பரப்பி வருகின்றனர். சசிகலாவுக்கும் தினகரனுக்கும் விசுவாசமாக இருப்பேனே தவிர திமுகவுக்கோ அதிமுகவுக்கோ செல்ல மாட்டேன்.
கூடாரம்
என்னை பொருத்தவரை கட்சித் தாவல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் அதிமுகவில் உள்ள நிர்வாகிகள்தான் எங்கள் கூடாரத்துக்கு வரவுள்ளனர் என்றார்.
நடவடிக்கை
ஆனால் அமமுக நிர்வாகிகளோ இப்படிதானே செந்தில் பாலாஜியும் கூறினார். ஆனால் கடைசியில் என்ன ஆனது. எனவே தினகரன் இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கலாய்த்து கொள்கின்றனர்.