Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1 ஏக்கர் 33 சென்ட்.. கட்டபொம்மன் பரம்பரையிலேயே "கை" வெச்சிட்டாங்களே.. திணறடித்த திண்டுக்கல் நிலமோசடி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ஓட்டபிடாரம் அருகே கட்டபொம்மன் வாரிசுகளின் இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டபொம்மன் வாரிசுகளிடமே நிலமோசடியா? என்று திண்டுக்கல் மாவட்டம் அதிர்ந்து காணப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஓட்டபிடாரம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளின் இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பிரமுகர் மீது குற்றஞ்சாட்டி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

புகார் மனு: இது தாெடர்பாக தமிழர் முன்னேற்றக் கழகம் நிறுவனர் தலைவர் அர்ச்சுணன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: "வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ஏக்கர் கணக்கான நிலத்தை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் பல பேருக்கு கிரயம் செய்து விற்றுள்ளார்.

1 acre 33 cents land kattabommans heirs

இவர் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தார். இதில், அண்ணாமலை (63) என்பவர் 1 ஏக்கர் 33 சென்ட் இடத்தை ரூ.8 லட்சத்திற்கு கிரையம் செய்துள்ளார். ஓட்டபிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் சென்று பட்டாவை மாற்றித் தாருங்கள் என கேட்டதற்கு, இது மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு அரசால் வழங்கபட்டது. எனவே இதை வட்டாச்சியர் பட்டா மாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.

ஆளுங்கட்சிக்காரன்: அவர் சரவணகுமாரிடம் இது பற்றி கேட்டபோது, "நீ எங்கு வேணாலும் போ நான் ஆளுங்கட்சிகாரன் ஒன்னும் பண்ணமுடியாது" என கூறியுள்ளார். எனவே அண்ணாமலை இது சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் சுமார் 4 ஏக்கர் அளவிலான இடத்தை சுமார் 430 பேருக்கு கிரையம் செய்துள்ளார். அவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர்.

ஆகவே மோசடி நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திரும்ப அளிக்கவும், இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிலமோசடி: நிலத்தை வாங்கியவர், சமீபத்தில் பட்டா மாறுதல் கேட்டு, தாலுகாஆபீசுக்கு சென்றபோதுதான், இப்படியொரு மோசடி குறித்து தெரியவந்துள்ளதாம்.. கட்டபொம்மன் வாரிசுகளிடமே மோசடி நடந்துள்ளதாக புகார் சென்றிருப்பது பரபரப்பை கூட்டிவருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+