மலைக்கோட்டை இருக்கு.. அந்த 5,000 மரக்கன்றுகள்? மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது பகீர் புகார்
திண்டுக்கல்: திண்டுக்கல்லின் அடையாளமான வரலாற்று புகழ் வாய்ந்த மலைக்கோட்டையை பசுமையாக்குவதாக கூறி ரூ50 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் வனத்துறை அமைச்சரும் அதிமுக இபிஎஸ் அணியின் அக்கட்சி பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் மீது மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழக வனத்துறை அமைச்சராக திண்டுக்கல் சீனிவாசன் இருந்து வந்தார். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் சுதந்திர போராட்டத்தில் தொடர்புடைய திண்டுக்கல் மலைக்கோட்டையை பசுமை மிக்கதாக மாற்ற அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்தது.

மலைக்கோட்டையில் மரங்கள்
இதற்காக திண்டுக்கல் மலைக்கோட்டையின் மேலே உள்ள பாறைகளில் வளரக்கூடிய அத்தி, அரசு, ஆல், இச்சி, கல் இச்சி உள்ளிட்ட பல வகை மரங்களை நடவு செய்து அதனை சொட்டு நீர் பாசனம் மூலம் வளர்க்க முடிவு செய்து கடந்த 2017-18ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானிய கோரிக்கையின் போது ஒரு மரம் வளர்க்க ஆயிரம் வீதம் 5000 மரங்களை நடவு செய்து மரங்களை வளர்க்க 50 லட்சம் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.

சொட்டு நீர் பாசனம்
அதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டுக்கல் மலைக்கோட்டையில் அத்தி, அரசு, ஆல், இச்சி, கல்இச்சி போன்ற மரங்கள் பாறையில் இடுக்குகளில் நடவு செய்யப்பட்டது. இதற்கான விழாவில் அப்போதைய வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கலந்து கொண்டு மரங்களை நட்டார். பாறைகளில் நடப்பட்ட மரச் செடிகளுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் விட ஏற்பாடு செய்யப்பட்டது.

மரங்களை காணோம்?
ஆனால் மரங்கள் நடப்பட்டதோடு சரி அதன்பின்பு மரத்தினை வளர்க்க வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் 5,000 மரங்கள் நடப்பட்ட இடத்தில் தற்பொழுது ஒரு மரம் கூட வளரவில்லை. தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

ஆட்சியரிடம் புகார்
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் கூறுகையில், முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொகுதியில் ஒரு நல்ல திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் இதில் மோசடி நடைபெற்று உள்ளது. மலைக்கோட்டையில் 5000 மரக்கன்று நடப்படவில்லை. குறைவாக நடப்பட்ட மரக்கன்றுகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை. ஆகவே இந்த மோசடியில் அப்போதைய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இம்மனுவை உடனடியாக தமிழக முதலமைச்சருக்கு அனுப்புவதாக மாவட்ட ஆட்சியர் விசாகன் உறுதி அளித்துள்ளார் என்றார்.
-
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா?












Click it and Unblock the Notifications