கடை பூரா தக்காளி கூடைகள்.. வாங்க ஆளில்லை.. திண்டுக்கல்லில் மாத்தி யோசிச்ச வியாபாரி!
திண்டுக்கல்: ஆடி தள்ளுபடின்னா துணிக் கடைக்கும் நகைக் கடைகளுக்கும் மட்டும்தான் கொடுக்க வேண்டுமா என்ன? அதிக விலைக்கு விற்பனையாகும் தக்காளிக்கு குடுக்கலாமேனு மாத்தி யோசித்துள்ளார் காய் கடை உரிமையாளர்!
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தக்காளி அதிகம் விலையும் மாநிலங்களில் தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்து விலை அதிகரித்துவிட்டது.

தமிழகத்தில் 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ 60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் இவற்றை வாங்க நீண்ட வரிசையில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதாவது ரேஷன் கடைகள் திறப்பதற்கு முன்பே காத்திருக்க வேண்டும் என்பதால் மக்கள் பலர் இந்த கடைகளுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலையில் தற்போது தினந்தோறும் ரூ 10, 20 என தக்காளி விலை குறைந்தாலும் முன்பு போல் தாராளமாக பயன்படுத்தும் அளவுக்கு இதன் விலை இல்லை. இந்த நிலையில் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் ஒரு புதிய யோசனையை தக்காளி வியாபாரிகள் கையாண்டு வருகிறார்கள். இங்கு சில்லறையாவும் மொத்தமாகவும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
கிலோ தக்காளியே 120 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுவதால் விலை குறையும் வரை தக்காளியே பயன்படுத்தாமல் ஏதாவது செய்து சாப்பிட மக்கள் தயாராகிவிட்டனர். இதனால் குறைந்த அளவு லாரிகளில் வந்த தக்காளிகளும் வீணானது. இதனால் என்ன செய்யலாம் என யோசித்த காய்கறி விற்பனையாளர்கள் மாத்தி யோசித்து ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் சென்ற வாரம் திண்டுக்கல் மொத்தக் கடை உரிமையாளர் 5 டன் தக்காளிகளை ரூ 60 க்கு விற்பனை செய்தார். ஆடி மாதம் என்றாலே துணிக்கடைகளுக்கும் நகைக் கடைகளுக்கும் தள்ளுபடி வழங்குவதை கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் திண்டுக்கல்லில் முதல் முறையாக கிலோ தக்காளி ரூ 60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
8 டன் தக்காளிகளை மொத்தமாக வியாபாரம் செய்யாமல் ஒரு நபருக்கு இரண்டு கிலோ வீதம் தக்காளிகளை ஆடி மாத தள்ளுபடியாக குறைந்த விலைக்கு விற்பனை செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் தக்காளி விலை 50 ரூபாய்க்கு கீழ் விற்பனையாகும் வரை ஆடி மாதத்தில் வாரம் ஒரு முறை பொது மக்களுக்காக ரூ 60 க்கு விற்பனை செய்கிறோம்.
இதனால் பொதுமக்கள் காலை 5 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தக்காளி வாங்கி செல்கிறார்கள். இந்த விலைக்கு வாரம் ஒரு முறை விற்கப்படும். இதை பொதுமக்கள் வாங்கி பயன்பெறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications