Karthigai Deepam: கார்த்திகை தீப பெருவிழா.. பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், செவ்வாய்க்கிழமையான நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழனி மலை முருகன் கோயில். இந்தக் கோயிலில் தீபக் காா்த்திகை பெருவிழா காப்புக் கட்டுடன் கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு, மலைக்கோயிலில் நாள்தோறும் மாலை வேளையில் சண்முகாா்ச்சனை, சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம். தீபாராதனை, சின்னக்குமாரசாமி தங்கச்சப்பரத்தில் யாகசாலை புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பரணி தீபம்
நேற்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூலவா் சந்நிதியில் பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 6.45 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உட்பிரகார உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 7.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலை 4 மணிக்கு கோயிலின் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, சாயரட்சை பூஜை, சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளது. பின்னா், யாகசாலை பூஜைக்கு சின்னக்குமாரசாமி சா்வ அலங்காரத்துடன் தங்கமயில் வாகனத்தில் மாலை 4.45 மணிக்கு அருள்பாலிப்பாா்.
கார்த்திகை தீபம்
மாலை 6 மணிக்கு மேல் சிவாச்சாரியாரால் கோயில் முன்பு உள்ள தீபஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பனை, தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப் பனையில் எண்ணெய், நெய் ஊற்றப்பட்டு கொளுத்தப்படும்.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, இன்று தங்கத் தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் குடமுழுக்கு அரங்கம் நுழைவாயில் தற்காலிகமாக அடைக்கப்படும். 2 மணி முதல் 6 மணி வரை பக்தா்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications