சூடான வடை பாரு.. மன்சூரு சுடுராரு.. ஒரு வடை 8 ரூபாதாங்க.. அதகளப்படும் திண்டுக்கல்!
திண்டுக்கல் டீ கடையில் வடை சுட்டு மன்சூரலிகான் வாக்கு சேகரித்து வருகிறார்.
Recommended Video

திண்டுக்கல்: "வாங்க.. வாங்க.. 8 ரூபாய்.. 8 ரூபாய்.. ஒரு வடை 8 ரூபாய்.. சூடான வடை" என்று டீக்கடை வாசலில் விற்று கொண்டிருந்தார் மன்சூரலிகான்!
எல்லா கட்சி வேட்பாளர்களுக்கும் தலைவர்களோ, பிரபலங்களோ பிரச்சாரம் செய்து ஓட்டு கேட்கிறார்கள் என்றால், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டும் அது தேவையே படாது. அந்த அளவுக்கு தாங்களே பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள்.
தெலுங்கானாவில்கூட பிரச்சாரத்தின்போது மக்களை கவர என்னென்னவோ செய்தார்கள். ஆனால் பெரும்பாலும் அவை முகசுளிப்பையே தந்தது.

ரசிக்கும் மக்கள்
ஆனால் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் மன்சூரலிகான், மக்களை கவர எத்தனையோ வகைகளை கையில் எடுக்கிறார்! எல்லாமே தொகுதி மக்களால் ரசிக்கும்படியாகவே உள்ளது!

தொழிலில் ஐக்கியம்
ஒருவேளை பாக்கி இல்லாமல் எல்லாவற்றையும் சீரும் சிறப்புமாக செய்து முடித்து வாக்கு கேட்கிறார். இதில் ஒரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், என்ன தொழில் செய்கிறாரோ, மன்சூரும் அப்படியே அதே தொழிலில் ஐக்கியமாகி விடுவதுதான்.. பார்ப்பதற்கு நடிப்பு போன்றோ, பாவ்லா போன்றோ தெரியவே இல்லை. வெரி கேஷூவல்!

டீக்கடை
இப்படித்தான் ஒரு பகுதியில் குழந்தைகளுக்கு தட்டில் சோறு வைத்து ஊட்டி கொண்டிருந்தார். அப்பறம் ஆளை காணோம்.. கொஞ்ச நேரத்தில், கலெக்டர் ஆபீஸ் எதிரே உள்ள டீக்கடையில் ஆஜர் ஆகி இருந்தார். "சூடான வடை.. வாங்க... வாங்க.. ஒரு வடை 8 ரூபாய்.. 8 ரூபாய்" என்று விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

சூடான வடை
அந்த பக்கமாக செல்பவர்கள், "எங்கேயோ பார்த்த முகம் போல இருக்கிறதே.." என்று நினைத்து, அதன்பிறகுதான் மன்சூர் என்று தெரிந்ததும் புன்னகையித்தவாறே நகர்ந்து சென்றனர். ஒருசிலர் இதற்காகவே டீக்கடைக்கு சென்று வடையை வாங்கி சாப்பிட்டனர். எப்படியும் குறிப்பிட்ட ஓட்டுக்களை மன்சூர் வாங்கிவிடுவாராம்.. கன்ஃபார்ம் என்கிறார்கள் தொகுதி மக்கள்!
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications