திண்டுக்கல்லில் ரூ17.17 கோடியில் ஈழத் தமிழருக்கு 321 வீடுகள்- அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் ஆய்வு
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார் என அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், தோட்டனுாத்து கிராமத்தில் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 321 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் இறுதிக்கட்ட பணிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமையில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறையை உருவாக்கினார். தமிழகத்தில் உள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வசிக்கின்ற 106 இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களுக்கு, நிரந்தரமான வீடுகள், குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழகத்தில் 106 முகாம்களில் உள்ள 7,469 வீடுகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், வீடுகள் கட்டும் திட்டம் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில், முதற்கட்டமாக தோட்டனுாத்து, அடியனுாத்து மற்றும் கோபால்பட்டி ஆகிய மூன்று இலங்கை அகதிகள் முகாம்களை ஒருங்கிணைத்து, தோட்டனுாத்து கிராமத்தில் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, நுாலகம், பூங்கா அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கும் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் விரைவாகவும், திருப்திகரமாகவும் நடைபெற்று வருவகிறது. இதேபோன்ற வடிவமைப்பில் மற்ற மாவட்டங்களிலும் பணிகள் தொடர ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பணிகளும் முடிந்து, விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைப்பார் என அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்.
-
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications