பழனி முருகன் கோயிலில் சிலிர்க்க வைத்த பக்தர்கள்.. உண்டியலில் அள்ள அள்ள தங்கம்.. குவிந்த கோடிகள்
திண்டுக்கல் : அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ் பெற்ற திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு உண்டியல் மூலம் ரூ.3¾ கோடி காணிக்கை கிடைத்திருக்கிறது.
உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முக்கியமானது பழனி முருகன் கோயில் தான். இந்த கோயிலுக்கு சபரிமலைக்கு வந்து செல்லும் பல பக்தர்கள் அப்படியே பழனிக்கு வந்து செல்கிறார்கள். பழனிக்கு என்றே ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

பொதுவாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் முருக பெருமானை தரிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தார்கள். நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு பல நாட்கள் கூட்டம் நிலவியது.
இந்நிலையில் பழனி மலை முருகன் கோயிலில் ஒவ்வொரு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை உண்டியலில் உள்ள காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெறும். அந்த வகையில் பழனி முருகன் கோவிலில் கடந்த 2 நாட்களாக காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் உண்டியலை எண்ணும் பணி நடந்தது.
நேற்று முன்தினம் நடைபெற்ற உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 68 லட்சத்து 11 ஆயிரத்து 653 கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 687 செலுத்தப்பட்டுள்ளது. இதுதவிர தங்க பொருட்கள் 651 கிராம், வெள்ளி பொருட்கள் என 12 கிலோ (12,525) கிராம் ஆகியவை காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பபட்டள்ளது.
இந்தநிலையில் செவ்வாய்கிழமையான நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்தது. அதில் ரூ.1 கோடியே 16 லட்சத்து ஆயிரத்து 15 கிடைத்தது. அதேபோல் தங்கம் 45 கிராம், வெள்ளி 2¼ கிலோ (2358), வெளிநாட்டு கரன்சிகள் 193-ம் கிடைத்தன.
அதன்படி கடந்த 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையின் மூலம் பழனி முருகன் கோவிலுக்கு ரூ.3 கோடியே 84 லட்சத்து 12 ஆயிரத்து 668 காணிக்கையாக கிடைத்துள்ளது தங்கம் 696 கிராம், வெள்ளி 14¾ கிலோ (14,883), வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 880-ம் கிடைத்திருக்கிறது.
தைபூசம் நெருங்கும் நிலையில் பழனிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பழனி-திண்டுக்கல் சாலை, பழனி -கோவை சாலை, பழனி-தாராபுரம் சாலையில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. தை பொங்கலுக்கு முன் முருகனை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலரும் வந்து கொண்டே இருக்கிறார்கள். தை பூசம் அன்று பழனியில் பல லட்சம் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications