இலங்கைத் தமிழர்களின் இன்னல் தீர்த்த முதல்வர்! 8 மாதங்களில் 321 வீடுகள்! பயனாளிகள் ஆனந்தக் கண்ணீர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 321 புதிய வீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
முதலில் திண்டுக்கல்லுக்கு செல்ல திட்டமிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் பிறகு தனது பயணத்தை ரத்து செய்து, சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்தவாறு இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
திண்டுக்கல் தோட்டனூத்து ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

1990களில் அகதிகள்
கடந்த 1990ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களை திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி பகுதிகளில் அப்போதைய முதல்வர் கருணாநிதி முகாம்கள் அமைத்து தங்க வைத்தார். இந்நிலையில் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை தீர்க்கும் வகையில் 321 புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க முடிவெடுத்த முதல்வர் ஸ்டாலின் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் இது தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

என்னென்ன வசதிகள்?
இதையடுத்து கட்டுமானப் பணிகள் காலதாமதமின்றி தொடங்கப்பட்டு மளமளவென பணிகள் நடைபெற்றன. இலங்கை தமிழர்களுக்காக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள புதிய வீடுகளில் ஒரு வரவேற்பரை, சமையலறை, ஒரு படுக்கையறை, கழிவறை, உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோல் தார்சாலை, நூலகம், அங்கன்வாடி உள்ளிட்ட வசதிகளும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தால் முகாம்களில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

முகாம் அலுவலகம்
திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்துக்கே சென்று முகாம்களை ஒருங்கிணைத்து கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளை திறந்து வைக்க திட்டமிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் ஏனோ தெரியவில்லை தனது பயணத்தை ரத்து செய்தார். இதையடுத்து நிகழ்ச்சியை காணொலி மூலம் நடத்தி அதில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின். திண்டுக்கல் தோட்டனூத்து ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆனந்தக் கண்ணீர்
இதனிடையே தங்களுக்கு எல்லா வசதிகளுடன் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதால் இலங்கைத் தமிழர்கள் ஆனந்தக் கண்ணீருடன் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். விழா மேடையில் பேசிய ஒரு பெண்மணி முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் போது தாங்கள் எவ்வாறு இலங்கையிலிருந்து இந்த முகாமிற்கு வந்தோம் என்ற பழைய பின்னணியை விவரித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications