Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

100%.. சபாஷ்.. நாட்டிலேயே முதன்முறையாக.. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நகராட்சி "கொடைக்கானல்"

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: நாட்டிலேயே முதன்முறையாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய நகராட்சியாக கொடைக்கானல் திகழ போகிறது..!

சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தலைதூக்கியது.. அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும்கூட, தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.

எனினும், தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. குறிப்பாக, அந்தந்த மாவட்டங்களின் நோய் தொற்றின் தன்மைக்கு ஏற்ப, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக முதல்வர் அனுமதி வழங்கியிருக்கிறார்...

 தொற்று பரவல்

தொற்று பரவல்

இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், நோய்ப் பரவல் தன்மைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகமும் நடைமுறைப்படுத்தி வருகிறது... இதில் கூடுதலாக, சென்னையில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதியாக 9 இடங்களை கண்டறிந்து ஒரு வாரத்துக்கு அந்த பகுதிகளிலுள்ள கடைகளை திறக்க சென்னை மாநகராட்சி தடை போட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகின்றன.

 பீதி - கலக்கம்

பீதி - கலக்கம்

தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது... எனினும் 3-ம் அலை குறித்த பீதியும் கலக்கமும் பொதுமக்களிடம் உள்ளது.. இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது.

 மா.சுப்பிரமணியம்

மா.சுப்பிரமணியம்

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார்... அப்போது அவர் சொன்னதாவது: "கொடைக்கானல், பழனியில் வாழும் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்படும். இதில் கொடைக்கானலில் தற்போது 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. மீதமுள்ளவர்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் தடுப்பூசி போடப்படும்.

 திண்டுக்கல்

திண்டுக்கல்

அதேபோல் ஆன்மிக சுற்றுலாத் தலமான பழனியிலும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். இதற்காக கொடைக்கானல், பழனிக்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கப்படும்.திண்டுக்கல்லில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் செயல்படும் மையத்தில் தினமும் 3 ஆயிரம் பேருக்கு டெஸ்ட் செய்யப்படுகிறது. மேலும் கூடுதலாக ரூ.52 லட்சம் செலவில் பரிசோதனை கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக தினமும் 2 ஆயிரம் பேருக்கு டெஸ்ட் செய்யலாம். மேலும் திண்டுக்கல்லில் 2 நடமாடும் தடுப்பூசி வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

 தடுப்பூசிகள்

தடுப்பூசிகள்

இதனைதொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச் சாவடியில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது... வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ குழுவினர் கொரோனா டெஸ்ட் செய்து வருகின்றனர்.

 நகராட்சி

நகராட்சி

இதனால் கொடைக்கானல் நகராட்சியில் இதுவரை 99 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்... முதல் மற்றும் 2-வது டோஸ் 99 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில் 150-க்கும் குறைவான நபர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்படவேண்டும். அவர்களுக்கும் இன்னும் 2 நாட்களில் செலுத்தப்பட்டு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய நகராட்சியாக கொடைக்கானல் மாற போகிறது.. இதனால் சுகாதாரத்துறையினர் அவர்களை வீடு வீடாகத் தேடி சென்று தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கிறார்கள்.

 பழங்குடி மக்கள்

பழங்குடி மக்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 88 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது... இதில் முதல் டோஸ் 4 லட்சத்து 94 பேருக்கும், 2-வது டோஸ் 94 ஆயிரம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது... பழனியில் 68 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இப்படித்தான் பழங்குடி மக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியல் நீலகிரி மாவட்டம், இந்தியாவிலேயே முதலிடத்தை பிடித்தது..இப்போது 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய நகராட்சியாக கொடைக்கானல் மாற உள்ளது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+