திண்டுக்கல் அருகே இன்று திறக்கப்பட இருந்த சுங்க சாவடி சூறை- அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு லட்சுமிபுரத்தில் இன்று திறக்கப்பட இருந்த சுங்கச் சாவடியை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவடையாத நிலையிலேயே சுங்க சாவடி மூலம் வசூல் வேட்டையில் இறங்குவதைக் கண்டித்து அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், லட்சுமிபுரம் சுங்க சாவடியை தாக்கி சூறையாடியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல், தேனி, பெரியகுளம், குமுளி செல்வதற்காக வத்தலகுண்டு நகருக்குள் செல்லாமல் புறவழியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இருந்த போதும் இந்த சாலையில் அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் வத்தலகுண்டு புறவழிச்சாலையானது சிறு சிறு குன்று பகுதிகளை வெட்டி அதனூடாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்தும் வருகிறது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் என்ற இடத்தில் சுங்க சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை பணிகள் அனைத்தும் முழுமை அடையவில்லை. ஆனால் லட்சுமிபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சுங்க சாவடிகள் இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
லட்சுமிபுரம் சுங்க சாவடி இன்று திறக்கப்பட இருந்த நிலையில் அப்பகுதியைச் சுற்றிய கிராம மக்கள் தன்னெழுசியாக திரண்டு, சுங்க சாவடி மீது தாக்குதல் நடத்தினர்; சுங்க சாவடி செயல்படாத வகையில் முற்றிலுமாக அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இதனால் அந்த நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பும் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து லட்சுமிபுரம் சுங்க சாவடி பகுதிக்கு வந்த போலீசார், பொதுமக்களின் ஆவேசத்தின் பின்னணி குறித்து விசாரித்தனர். நான்கு வழிச் சாலை பணிகள் முழுமையே அடையாமல் எதற்காக சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என போலீசாரிடம் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
ஏற்கனவே மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கசாவடியையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு பல நாட்கள் போராட்டம் நடத்தினர். அதேபோல பல்வேறு சுங்க சாவடிகளில் அநியாய கொள்ளை வசூல் வசூலிக்கப்படுவதற்கு எதிராக அவ்வப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டவைகளின் தொண்டர்கள் சுங்க சாவடிகளை தாக்கி வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக திரண்டு திண்டுக்கல் வத்தலகுண்டு சுங்க சாவடியை சூறையாடியிருக்கின்றனர்.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications