திண்டுக்கல்லில் ஒரே நாளில் அம்பலப்பட்ட 2 பெண் அதிகாரிகள் கைது.. ஆபிஸிலேயே நடந்த சம்பவம்
திண்டுக்கல்: அரசு அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களில் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் ஒருவர் லஞ்சம் வாங்கிய புகாரில் கையும் களவுமாக சிக்கினார். அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராம நிர்வாக அதிகாரி பட்டா பெயர் மாற்றத்திற்காக சிக்கினார். அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் லஞ்சம் வாங்கிய 2 பெண் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். திண்டுக்கல்லை அடுத்த நரசிங்கபுரம் வி.கள்ளுப்பட்டியை சேர்ந்த 30 வயதாகும் பிரியதர்ஷன் பொறியாளர் ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்காக விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்ட நிலையில், உரிய ஆவணங்களுடன் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் இருந்து அறிவிப்பு வந்துள்ளது.

இதையடுத்து பிரியதர்ஷனும் உரிய ஆவணங்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சமூகநல விரிவாக்க அலுவலர் உமாராணி திருமண உதவித்தொகை, 8 கிராம் தங்கம் வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று கேட்டாராம்.
ஆனால் அவ்வளவு தொகை தன்னிடம் இல்லை என்று பிரியதர்ஷன் கூறினார். இதையடுத்து ரூ.3 ஆயிரத்தை கொடுத்துவிட்டு உதவித்தொகை, தங்கத்தை பெற்றுச்செல்லுமாறு கூறினாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரியதர்ஷன் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் டிஎஸ்பி நாகராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி தலைமையிலான போலீசார் உமாராணியை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி ரசாயனம் தடவப்பட்ட 3 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகளை பிரியதர்ஷனிடம் கொடுத்தனர். அந்த பணத்தை அவர், நேற்று காலை 11 மணி அளவில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று உமாராணியிடம் கொடுத்துள்ளார்,
அதை அவர் வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உமாராணியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பிலாத்து ஆண்டிக்குளம் பகுதியை சேர்ந்த 60 வயதாகும் விவசாயி கருப்பையா என்பவர் பி.எம்.கிஷான் திட்டத்தில் விவசாயிகளுக்கான உதவித்தொகை பெற்று வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக பணம் வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கருப்பையா, வடமதுரை உதவி வேளாண்மை அலுவலர் சந்திரலேகாவிடம் கேட்டுள்ளாராம் அப்போது அவர் வேளாண்மை துறையின் 'கிரைன்ஸ்' என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் உங்களுக்கு பணம் வந்துவிடும். அதற்கு ரூ.2,500 லஞ்சம் தரவேண்டும் என கேட்டாராம்.
கருப்பையா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். இறுதியாக ரூ.2 ஆயிரம் தந்தால் செய்து கொடுப்பதாக சந்திரலேகா கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பையா திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து போலீசார் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை கருப்பையாவிடம் கொடுத்து அனுப்பினர்.
வடமதுரை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு கருப்பையா சென்று சந்திரலேகாவிடம் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சந்திரலேகாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய 2 பெண் அதிகாரிகள் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications