திண்டுக்கல் ஜக்கிரியாவுக்கு வந்த ஆசை.. இப்போ ஒட்டு மொத்தமும் போச்சே! பின்னால் மறைந்திருந்தது யார்?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே பட்டா மாறுதல் வழங்குவதற்காக 2500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட இருக்கிறார். லஞ்சம் பெரும் போது பின்னால் மறைந்திருந்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே லஞ்ச ஒழிப்பு போலீசார் விரிக்கும் அளவில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் என ஆகிவிட்டது எங்கு போனாலும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் பெற முடியாது. பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை லஞ்சம் தான் எங்கும் பரவிக் கிடக்கிறது என குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.
அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் லஞ்ச பணத்துடன் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். பத்திரப் பதிவு அலுவலகங்கள் தொடங்கி கிராம நிர்வாக அலுவலகங்கள் வரை பொறிவைத்து அதிகாரிகளை கைது செய்து வருகின்றனர் லஞ்ச ஒழிப்பு போலீசார். அந்த வகையில் தான் திண்டுக்கல்லில் 2500க்கு ஆசைப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் பண்ணைப் பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரன் அதே ஊரில் நிலத்தை வாங்கி இருக்கிறார் அந்த நிலத்தை தனது பெயரில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என ஆன்லைன் மூலம் மார்ச் மாதத்தில் விண்ணப்பித்திருக்கிறார். தொடர்ந்து அவருக்கு வருவாய் துறை சார்பில் பட்டா கொடுக்கப்பட்டது. ஆனால் மகேஸ்வரன் பெயரோடு வேறு சில பெயர்களும் அதில் கூட்டு பட்டாவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தனக்கு தனிப்பட்டா வேண்டுமென விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக சிலுவத்தூர் கிராம நிர்வாக அதிகாரியான முகம்மது ஜக்கிரியா மகேஸ்வரனை அழைத்து பேசியிருக்கிறார். தனிப்பட்டா வழங்க தனக்கு 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என பேரம் பேசி இருக்கிறார். இறுதியில் 2500 ரூபாய் தருவதாக மகேஸ்வரனும் ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் ஜக்கிரியா தன்னிடம் லஞ்சம் கேட்டது குறித்து மகேஸ்வரன் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் புகார் கொடுத்திருக்கிறார்.
இதை அடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மகேஸ்வரனிடம் கொடுத்து அனுப்பி இருக்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். நேராக சிறுவத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்ற மகேஸ்வரன் முகமது ஜக்கிரியாவிடம் 2500 ரூபாய் பணத்தை கொடுத்து இருக்கிறார். அதனை வாங்கிய போது ஏற்கனவே அங்கு மறைந்திருந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி நாகராஜன் உள்ளிட்ட போலீசார் ஜக்கிரியாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து லஞ்சப் பணத்துடன் அவரை கைது செய்திருக்கின்றனர். 2500 ரூபாய் பணத்துக்காக தனது ஒட்டுமொத்த வாழ்க்கையை இழந்திருக்கிறார் ஜக்கிரியா.












Click it and Unblock the Notifications