Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் - மாம்பழம் செட்டே ஆகாதே.. மிக மோசமான தோல்வியை சந்தித்த பாமக! கரைசேர்வாரா திலகபாமா?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் திண்டுக்கல் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. பாமக சார்பில் திலகபாமா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திலகபாமா டெபாசிட்டை இழந்தார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் பாமக போட்டியிட்டது. பாமக சார்பில் ஜோதிமுத்து மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். திமுக சார்பில் போட்டியிட்ட வேலுச்சாமி 7,46,523 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவால் வெறும் 2,07,551 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. முடிவில் 5.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முடிசூடினார் திமுகவின் வேலுச்சாமி.

Will Thilagabama who lost her deposit last time win in Dindigul

மிக மோசமான தோல்வி: தமிழ்நாட்டிலேயே, ஏன் தென்னிந்தியாவிலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்த தொகுதி திண்டுக்கல் தான். எனினும், திண்டுக்கல் தொகுதியில் பாமகவின் மாம்பழச் சின்னம் ஏற்கெனவே நன்கு பரிச்சயமானது மற்றும் வன்னியர் சமூக வாக்குகள் அதிகம் இருக்கும் தொகுதி என்பதால் இந்த முறையும் திண்டுக்கல் தொகுதியை கேட்டுப் பெற்று களமிறங்கியுள்ளது பாமக.

இந்நிலையில், பாமக சார்பில் திண்டுக்கல் லோக்சபா தொகுதி வேட்பாளராக திலகபாமா அறிவிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக, சிபிஐஎம் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ மாநில செயலாளர் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். இதனால் திண்டுக்கல் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

திண்டுக்கல்லில் களமிறங்கும் திலகபாமா: எழுத்தாளரும், கவிஞருமான திலகபாமா, பாமகவில் மாநில பொருளாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். பாமகவின் முக்கியமான பேச்சாளராகவும் இருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பிறந்தவர் திலகபாமா. மதுரையில் படித்து, தற்போது சிவகாசியில் வசித்து வருகிறார்.

ஆத்தூரில் டெபாசிட் காலி: கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அனைத்து சுற்றுகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஐ.பெரியசாமி முன்னிலை பெற்று வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் ஐ.பெரியசாமி 1,63,689 வாக்குகளும், பாமக வேட்பாளர் திலகபாமா 29,607 வாக்குகளும் பெற்றனர்.

இறுதியில் ஐ.பெரியசாமி 1 லட்சத்து 34 ஆயிரத்து 82 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திலகபாமா உட்பட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில், ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி அமோக வெற்றி பெற்றார்.

திண்டுக்கல்லும் பாமகவும்: இந்நிலையில் தான் லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் தற்போது களமிறக்கப்பட்டுள்ளார் திலகபாமா. 2021 சட்டசபை தேர்தலில் டெபாசிட்டையே இழந்து மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர் திலகபாமா. 2019 லோக்சபா தேர்தலில் தென் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாமக தோற்ற தொகுதி திண்டுக்கல்.

ஆக, கடந்த 2 தேர்தல்களில் பாமகவுக்கு திண்டுக்கல் மோசமான முடிவுகளைக் கொடுத்திருக்கிறது. திண்டுக்கல்லில் பாமக இதுவரை வென்றதே இல்லை. இந்நிலையில், திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், திலகபாமா கரைசேர்வாரா? நான்கு முனைப் போட்டியில் வெல்லப் போவது யார்? பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+