புர்ஜ் கலீபா அருகில் வெடித்த குண்டு.. அலறிய மக்கள்! அமெரிக்க ஆதரவு UAE-க்கு ஈரான் பதிலடி!
துபாய்: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. உடன் இஸ்ரேலும் கைகோர்த்திருக்கிறது. இஸ்லாமிய நாட்டின் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்துவதை தடுக்காத அரபு நாடுகள், அமெரிக்காவுக்கு சப்போர்ட் செய்திருக்கின்றன. இந்நிலையில், அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் தாக்குதல் தொடுத்திருக்கிறது.
ஈரான் நடத்திய தாக்குதல் இஸ்ரேலைத் தாண்டி பரவியுள்ளது. துபாய் உட்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான்வெளியில், ஷாஹெட் ரக ஆளில்லா விமானங்களும் ஏவுகணைகளும் காணப்பட்டன. எமிரேட்ஸின் வான் பாதுகாப்புப் படைகள் பல தாக்குதல் முயற்சிகளை தடுத்து நிறுத்தின. இதையடுத்து, அதிகாரிகள் சேதங்களை ஆய்வு செய்துவிட்டு, முக்கிய இடங்களின் பாதுகாப்பை அதிகரித்தனர்.

சமூக வலைத்தளங்களில் பரவிய ஒரு வீடியோவில், ஒரு ட்ரோன் புர்ஜ் கலீபா அருகில் விழுந்து வெடித்துள்ளது. இது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. அபுதாபியில் விழுந்த சிதைவுகளால் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுவது, இந்த மோதலால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உறுதிப்படுத்தப்பட்ட முதல் மரணமாகும்.
ஈரானுக்கு அருகில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்தத் தாக்குதல்கள் நடந்தன. இது மோதல் மேலும் அதிகரிக்கலாம் என்பதற்கான ஒரு எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது. பகுதியிலுள்ள விமானப் பாதைகள் மூடப்பட்டிருப்பதும், உயர் எச்சரிக்கை நிலைகளும், வளைகுடா நகரங்கள் இன்னும் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தை உறுதிப்படுத்துகின்றன.












Click it and Unblock the Notifications