உலகின் மிக பெரிய கட்டிடமான.. புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த செம்மொழியான தமிழ்! முதல்வர் பார்வையிட்டார்
துபாய்: துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தமிழரின் பண்பாட்டையும் பறைசாற்றும் வகையில் கீழடியின் காணொலி ஒளிபரப்பான நிலையில், அதனை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்
Recommended Video
துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் உலக எக்ஸ்போ கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இன்று (மார்ச் 25) முதல் மார்ச் 31ஆம் தேதி வரை அங்குத் தமிழ்நாடு வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே சர்வதேச முதலீடுகளை ஈர்க்க நான்கு நாள் பயணமாகத் துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இந்த எக்ஸ்போ கண்காட்சியில் உள்ள தமிழ்நாட்டிற்கான அரங்கைத் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 192 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த உலக எக்ஸ்போ கண்காட்சியில் சுமார் 2.50 கோடி பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொல்தமிழர் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தமிழரின் பண்பாட்டையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் கீழடியின் காணொலி ஒளிபரப்பப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்
முன்னதாக, இன்று ஐக்கிய அமீரகத்தின் பொருளாதார துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்து அவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்க சாதகமான சூழ்நிலை குறித்து எடுத்துரைத்த ஸ்டாலின் அவர்களுக்கு, 'Karunanidhi A Life' என்ற புத்தகத்தையும் பரிசாக அளித்தார்.











Click it and Unblock the Notifications