சவுதி அரச குடும்பத்தையும் தாக்கிய கொரோனா வைரஸ்.. 150 பேருக்கு பாதிப்பு.. ரெடியாகும் மருத்துவமனை
ரியாத்: சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 150 பேர், சமீபத்திய வாரங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு செய்தி தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.
ரியாத் மாகாண கவர்னராக உள்ள 70 வயதாகும், சவூதி இளவரசர் பைசல் பின் பந்தர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

84 வயதாகும் அரசர் சல்மான், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (எம்.பி.எஸ்) போன்றோர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
அரச குடும்பத்தினருக்கு சிகிச்சையளிக்கும் ஒரு மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், 500 படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறார்களாம்.
"எங்களிடம் எத்தனை நோயாளிகள் வருவார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் அதிக எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம்" என்று அந்த மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
ஆயிரக்கணக்கான சவுதி இளவரசர்கள் உள்ளனர். பலர் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு பயணம் செய்கிறார்கள், அதில் சிலர் வெளிநாட்டில் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அதை சவூதி அரேபியாவிற்கு கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது.
சுமார் 33 மில்லியன் மக்கள் சவுதியில் உள்ளனர். அங்கு இதுவரை 2,932 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 41 பேர் அந்த நோய்க்கு இறந்துள்ளனர்.
இஸ்லாம் மதத்தின் புனித தலங்களான மெக்கா மற்றும் மதீனாவின் தாயகம் இந்த நாடு. ஆனால் இந்த, ஆண்டு முழுவதும் உம்ரா யாத்திரைக்கு தடை விதித்து, மார்ச் மாத தொடக்கத்தில் அந்த பகுதிகளை வழிபாட்டுக்கு திறந்துவிடாமல் மூடியது சவுதி அரசு.
ஐந்து முக்கிய நகரங்கள் 24 மணி நேர லாக்டவுனுக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications