Dubai - Chennai Flight: துபாய் டூ சென்னை கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. உயிர் தப்பிய பயணிகள்
துபாய்: துபாயில் இருந்து சென்னைக்கு 172 பயணிகளுடன் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், தொழில் நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவசர அவசரமாக விமானம் துபாய் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர்.
தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப கோளாறு சீர் செய்யும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோளாறு சரி செய்த பிறகு விமானம் கிளம்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பயணம் அமையாமல் தாமதம் ஆகியுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தொழில்நுட்ப கோளாறு
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் தினமும் மாலையில் துபாய்க்கு சென்றுவிட்டு மீண்டும் நள்ளிரவில் புறப்பட்டு அதிகாலை சென்னைக்கு வந்து சேரும். சென்னையில் இருந்து துபாய்க்கு வழக்கம்போல் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது.
பின்னர் துபாய் விமான நிலையத்தில் இருந்து, அந்த விமானம் சென்னைக்கு புறப்பட தயாரானது. 172 பயணிகள், 7 விமான ஊழியர்கள் உள்பட 179 பேர் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து விமானம் வானில் பறக்காமல் துபாய் விமான நிலையத்திலேயே அவசரமாக நிறுத்தப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, துபாய் விமான நிலைய ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் துபாய் விமான நிலைய என்ஜினீயர்கள், விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக பழுதை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து பயணிகள் 172 பேரும் துபாயில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விமானம் பழுதுபார்க்கப்பட்டு, தாமதமாக துபாயில் இருந்து, சென்னைக்கு புறப்பட்டு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை வரவேண்டிய பயணிகள் துபாயில் தவித்துக்கொண்டிருக்கின்றனர். விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன் 172 பயணிகள் உள்பட 179 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
-
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னை புறநகர் ரயில்கள் சேவை ரத்து.. ரயில்வே முக்கிய அறிவிப்பு -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன்











Click it and Unblock the Notifications