பாகிஸ்தானில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுத்த இந்தியர்... !
துபாய் : பாகிஸ்தானில் ஒரு மாவட்டத்தில் மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருவதை அறிந்த இந்திய வம்சா வழியை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் அந்த மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் அகல ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
துபாயில் போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருபவர் ஜோகிந்தர் சிங். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர். இதற்காகவே கடந்த 2012-ம் ஆண்டு முதல் பெஹல் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தர்பார்கர் மாவட்ட மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வருகின்றனர் என்பதை ஃபேஸ்புக் மூலமாக தெரிந்து கொண்ட ஜோகிந்தர் சிங் இவர்களுக்கு உதவ முடிவெடுத்துள்ளார். இதற்காக பாகிஸ்தானில் உள்ளல சமூக ஆர்வலர்களை இவர் நாடியுள்ளார்.
தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தர்பார்கர் மாவட்டத்தில் உள்ள கங்கர் என்ற சமூக ஆர்வலரை தொடர்புகொண்ட ஜோகிந்தர் சிங், இதற்கான பணிகளை அவரிடம் ஒப்படைத்துள்ளார். தண்ணீரின்றி தவித்து 62 கிராமங்களுக்கும் கை பம்புகள் அமைக்க திட்டமிட்ட ஜோகிந்தர் சிங் ஒரு கிராமத்திற்கு ஒரு கை பம்பு அமைக்குமாறு பாகிஸ்தான் சமூக ஆர்வலர் கங்கரிடம் கூறியுள்ளார்.
பின்னர் 62 தண்ணீர் பம்புகள் அமைக்க தேவைப்படும் நிதியை அளித்து வேலையை தொடங்க செய்துள்ளார். இதனையடுத்து கிராமத்திற்கு ஒரு பம்புகள் வீதம் அம்மாவட்டத்தில் உள்ள 62 கிராமங்களுக்கும் கைப்பம்புகள் அமைக்கப்பட்டன.
தண்ணீர் தேவையை அடுத்து அப்பகுதி மக்களுக்காக உணவு தானியங்களையும் ஜோகிந்தர் சிங் அனுப்பியுள்ளார். இன்னொரு நாட்டு மக்களின் துயர் துடைக்க உதவிய ஜோகிந்தர் சிங்கின் செயலுக்கு சமூக வளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications